காவேரிப்பாக்கம்
தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காவேரிப்பாக்கம் (ஆங்கிலம்: Kaveripakkam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காவேரிப்பாக்கத்தில் உள்ளது.
Remove ads
அமைவிடம்
காவேரிப்பாக்கம், வேலூரிலிருந்து 40 கி.மீ.. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையங்கள், 15 கி.மீ.. தொலைவில் உள்ள சோளிங்கர் மற்றும் 17 கி.மீ.. தொலைவில் உள்ள 'வாலாஜாபேட்டை சாலை' ஆகும். இதன் கிழக்கில் காஞ்சிபுரம் 35 கி.மீ..; மேற்கில் வாலாசாபேட்டை 15 கி.மீ..; வடக்கில் அரக்கோணம் 40 கி.மீ.. மற்றும் தெற்கில் செய்யாறு 50 கி.மீ.. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
5.18 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 84 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும்.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,323 வீடுகளும், 14,583 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.28% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]
புகழ்பெற்ற வாசிகள்
- வாசுகி (பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கு முன்னர்), தமிழ்ப் புலவர் வள்ளுவரின் மனைவி[3]
- அரியநாத முதலியார், விஜயநகர அரசின் அரசப் பிரதிநிதி[சான்று தேவை]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads