சா. சி. சிவசங்கர்

தமிழ்நாட்டு அரசியல்வாதி, எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சா. சி. சிவசங்கர் (S. S. Sivasankar) ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதியும் எழுத்தாளரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர், ஆண்டிமடம் (2006-11)[1], குன்னம் (2011-16; 2021-)[2] ஆகிய தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். சிவசங்கர் தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவையில் போக்குவரத்து, மின்துறை அமைச்சராகப் பணியாற்றிவருகிறார். இவர் மக்களுடன் என் அனுபவங்கள் (2015), சோழன் ராஜா ப்ராப்தி (2019), "தோழர்" சோழன் (2019) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் மாண்புமிகுசா.சி. சிவசங்கர், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ...
Remove ads

இளமை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள தேவனூரில் 24 மார்ச் 1969 அன்று பிறந்தார் சிவசங்கர். இவரது தந்தை சா. சிவசுப்பிரமணியன் தாயார் பெயர் சிவராஜேசுவரி ஆவார். ஆண்டிமடம் அரசுப் பள்ளியில், பள்ளிக் கல்வியினைப் பயின்றபின் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இளநிலைப் பொறியியல் பயின்றார் சிவசங்கர். 1991ஆம் ஆண்டு பட்டம் பெற்றபின் 1993 வரை பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றினார்.[3]

Remove ads

அரசியல்

தொடக்கமும் கட்சிப் பணிகளும்

1978ஆம் ஆண்டு திசம்பரில் திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டார் சிவசங்கர்.[3][4] 1993-ல் முழு நேர அரசியலில் நுழைந்தார். 1999ஆம் ஆண்டு ஆண்டிமடம் ஒன்றிய திமுக செயலாளராகத் தேர்வானார். 2001-ல் தனியாகப் பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு கட்சி அளவில் பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் இணைக்கப்பட்டதால், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளராக தொடர்ந்தார்.[3] தற்போது மீண்டும் அரியலூர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

உள்ளாட்சி உறுப்பினராக (1996-2006)

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக 1996 முதல் 2001 வரையிலும், பின் அரியலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக 2001 முதல் 2006 வரையிலும் பணியாற்றினார்.[5]

சட்டமன்ற உறுப்பினராக

2006 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டியிட்டு வென்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியை இழந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அமைச்சராக (2021-)

2021 தேர்தலில் திமுக கூட்டணி வென்றதைத் தொடர்ந்து மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மே 2021 முதல் மார்ச் 2022 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் அமைச்சரவை மார்ச் 2022-ல் மாற்றியமைக்கப்பட்டபோது போக்குவரத்து துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொகுதி ...
Remove ads

பிற பதவிகள்

கல்லூரிக் காலத்திலேயே புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த சிவசங்கர், புகைப்படவியலாளர் சங்க செயலாளராக இருந்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட தடகள சங்க உறுப்பினராகவும், தமிழ்நாடு சிலம்பம் சம்மேளனத் தலைவராகவும் இருந்துள்ளார் .

படைப்புகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...
Remove ads

தனி வாழ்க்கை

சிவசங்கரின் வசிப்பிடம் அரியலூர் ராஜாஜி நகர் ஆகும். இவர் இணையரான மருத்துவர் காயத்ரிதேவி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர்.[8] இவ்விணையருக்கு சிவசரண், சிவசூர்யா என்ற மகன்கள் உள்ளனர்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads