அரியலூர்
கலைமிகு 'கங்கை கொண்ட சோழபுரம் புராதன நினைவுச் சின்னங்கள்' அமைந்த அரியலூர், தமிழ்நாடு, இந்தியா. From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரியலூர் (Ariyalur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய தொழிற்சாலை நகரமாகும். அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். மேலும் இந்தியாவிலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து குவாரி சுரங்கம் மூலமாக சுண்ணாம்புக்கல் மற்றும் பைஞ்சுதை காரையான (சிமெண்ட்) அதிகமாக கிடைப்பதால் அதை மையமாக கொண்டு பல சிமெண்ட் ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளதால், அரியலூரை சிமெண்ட் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னை 279 கி.மீ. தொலைவில் உள்ளது.
Remove ads
பெயர்க்காரணம்
- அரியல் - ஒரு வகையான மதுபானம். இங்கு கள் உற்பத்தி இருந்ததனால் அந்த சிற்றூர் அரியலூர் என சொல்லப்பட்டிருக்கலாம்.
- விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.
- ஹரியலூர் என்ற பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
- அரி+இல்+ஊர்= அரியிலூர்.
- அரி- விஷ்ணு
- இல்- உறைவிடம்
- ஊர்- பகுதி.
- விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கம்.
- விஷ்ணு (திருமால்) சாந்தி வைணவ வழிபாட்டு திருக்கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
- மேலும் அக்காலகட்டத்தில் ஜமீன் ஆதிக்கமிக்க பகுதியாக இவ்வூர் சுற்று புறங்களில் இருந்ததால் அம்மக்கள் அனைவரும் அறியாமையால் இருந்ததாலும் அறியலூர் என்ற பெயர் காலபோக்கில் " அரியலூர் " என மாறியது என்றும் கூறப்படுகிறது.
Remove ads
வரலாறு
அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரக் காரணங்களுக்காக, அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 இல் உருவாக்கப்பட்டது.[1] அரியலூர் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
புவியியல்
அரியலூர் மாவட்டத்தில், (11.1404°N 79.0745°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அரியலூர் நகரம் அமைந்துள்ளது.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எல்லைகள்
கிழக்கே சிதம்பரம் 88 கி.மீ.; தெற்கே தஞ்சாவூர் 44 கி.மீ.; மேற்கே பெரம்பலூர் 31 கி.மீ.; வடக்கே விருத்தாசலம் 56 கி.மீ.; வடகிழக்கே கடலூர் 116 கி.மீ.; தென்மேற்கே திருச்சி 61 கி.மீ.; தொலைவிலும் அரியலூர் மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளது.
தனித்துவம்
இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்றாகும்.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,319 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 28,902 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,977 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,254 மற்றும் 8 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.55%, இசுலாமியர்கள் 4.61%, கிறித்தவர்கள் 3.81%, மற்றும் பிறர் 1.02.% ஆகவுள்ளனர்.[5]
Remove ads
அரியலூர் சிமெண்ட் ஆலைகள்
- டான்செம் (TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- ராம்கோ சிமென்ட் (Ramco Cement) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் துவங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
- டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான சிஐஐ வினைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
- செட்டிநாடு சிமெண்ட் (Chettinad Cement) கீழப்பழூர்.
- அல்ட்ரா டெக் சிமெண்ட் (Ultra Tech Cement) (Adithya Birla Group) ரெட்டிப்பாளையம்.
- இந்தியா சிமெண்ட் (Coromandel King-Sankar Sakthi) தளவை.
Remove ads
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
அரியலூர் நகராட்சியானது அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான (மதிமுகவை) சேர்ந்த கு. சின்னப்பா வெற்றி பெற்றார்.
Remove ads
கல்லூரிகள்
- அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்.
- அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.
- அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, கீழப்பழுவூர்.
- மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர்.
- விநாயகா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, கீழப்பழுவூர்.
கோயில்
போக்குவரத்து
பேருந்து போக்குவரத்து
- மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- துங்கபுரம் - திட்டக்குடி, மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - தஞ்சாவூர் மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - ஜெயங்கொண்டம் மற்றும் மாநில நெடுஞ்சாலை, அரியலூர் - செந்துறை - ஜெயங்கொண்டம் ஆகிய சாலைகள் அரியலூர் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும்.
- விரைவில் திருச்சி - விருத்தாசலம் நெடுஞ்சாலை அமையயுள்ளது. மேலும் இந்த சாலை வழி அமையுமானால் திருச்சியிலிருந்து அரியலூர் வழியாக விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், கடலூர், பாண்டிச்சேரி வரையில் குறுகிய நேர வழி சாலையாக அமையும்.
- மேலும் இவ்வழி சாலை மார்க்கத்திற்கு தற்போது திருச்சி மாவட்டம் கல்லகம் முதல் அரியலூர் வரையில் புதிய சாலை போடுவதற்கான 15 கி.மீ. தொலைவும் அதே போல் அரியலூர் முதல் பெண்ணாடம் வரையில் 40 கி.மீ. தொலைவிலும் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- இச்சாலை வழி அமைந்தால் திருச்சி–அரியலூர்–விருத்தாசலம் சாலை தூரமானது 120 கி.மீ. என்று குறுகிய நேர வழி சாலையாக மாற வாய்ப்புள்ளது.
- அதே போல் இவ்வழி தடத்தில் தஞ்சாவூர் மற்றும் அரியலூரிலிருந்து விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக சென்னைக்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதைவிட அரியலூர், விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை வழியான சென்னை இணைப்பு வழி சாலையானது அமைந்தால் அரியலூரை சுற்றியுள்ள பல சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற கனிம உற்பத்தி பொருட்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அதிகனரக வாகனங்களான சரக்கு உந்துகள் (Heavy Load Lorry's) மிக எளிய வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னை சென்று வர விரைவு வழி சாலையாக அமையும் என்பதே ஆகும்.
- மேலும் இங்கிருந்து சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், துறையூர், கும்பகோணம், ஜெயங்கொண்டம், பட்டுக்கோட்டை, சிதம்பரம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, விருத்தாச்சலம், திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், பழனி, கன்னியாகுமரி மற்றும் குமுளி ஆகிய இடங்களுக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.
தொடருந்து போக்குவரத்து
அரியலூர் தொடருந்து நிலையம் ஆனது சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியை இணைக்கும் ஒரு முக்கிய ரயில் நிலையமாகும். இங்கு தினமும் பல்லவன் தொடர்வண்டி, மலைக்கோட்டை விரைவுவண்டி, முத்து நகர் விரைவுவண்டி, வைகை விரைவுத் தொடர்வண்டி மற்றும் குருவாயூர் விரைவுவண்டி ஆகிய தொடர்வண்டிகள் இந்த இரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்நிலையத்திற்கு, காலை 7.40 மணிக்கு வந்தடையும், சென்னை எழும்பூரை நோக்கி செல்லும் பல்லவன் விரைவுத் தொடருந்துக்காக, தஞ்சாவூரிலிருந்து நேரடியாக இந்த தொடருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
வானூர்தி போக்குவரத்து
இதன் அருகில் உள்ள வானூர்தி நிலையம் 76 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
Remove ads
வானிலை மற்றும் காலநிலை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads