தென்னவன் (திரைப்படம்)
2003 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்னவன் 2003 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் எம்.நந்தகுமாரன் எழுதி இயக்கினார். இப்படத்தை விஜயகாந்த் தயாரித்தார். தென்னவன் ஐ.ஏ.எஸ்., தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடுகிறார். இப்படத்திக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். 2003 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று இப்படம் வெளியானது. பின்னர் இப்படம் தெலுங்கில் எலக்ஷன் கமிஷ்னர் என மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. [1]
Remove ads
நடிகர்கள் மற்றும் குழுவினர்
- விஜயகாந்த் - தென்னவன்
- கிரண் ராத்தோட் - திவ்யா
- நாசர் - இளந்திரயன்
- ஊர்வசி - புஷ்பலதா
- விவேக் - தாதா மணி
- பொன்னம்பலம்
- சிறீமன்
- மன்சூர் அலி கான்
- ராஜ்கபூர்
- தியாகு
- தலைவாசல் விஜய்
குழுவினர்
- கதை, திரைக்கதை, இயக்கம் : எம்.நந்தகுமாரன்
- தயாரிப்பு : விஜயகாந்த், எல்.கே.சுதிஷ்
- இசை : யுவன் சங்கர் ராஜா
- வசனம் : ஆர்.என்.ஆர் மனோகர்
- ஒளிப்பதிவு : ஏ.ரமேஷ் குமார்
- படத்தொகுப்பு : பி.எஸ்.வாசு - சலீம்
- கலை இயக்கம் : ஜே.கே.
- சண்டை : ராக்கி ராஜேஷ்
- நடனம் : சிவசங்கர், கலா, பிருந்தா & கல்யாண்
- உடைகள் : பிரேமலதா விசயகாந்து
- நிழற் படங்கள் : சதீஷ்குமார் - சுரேஷ்வாசன்
- பாடல் : பா. விஜய், நா. முத்துகுமார், சினேகன் மற்றும் முத்து விஜயன்
Remove ads
கதை
நடிகர் விஜயகாந்த் தென்னவன் என்ற கதாபத்திரத்தில் தேர்தல் அதிகாரியாக வந்து பணிகளை சிறப்பாக செய்கிறார். மக்களின் வாக்கு உரிமையை பற்றி விளக்கமாக எடுத்து சொல்கிறார். நாசர்(இளந்திரயன்) வில்லனாக முதலமைச்சராக இருந்து ஊழலில் மாட்டி பதவியை இழந்து தன் மனைவி புஷ்பலதாவை பதவி எற்றி விடுகிறார். ஊர்வசி(புஷ்பலதா) நல்ல நகைச்சுவையாக கணவன் பேச்சை கேட்டு அனைத்து வேலைகளையும் செய்கிறார். விவேக் ஒரு சிறிய ரெடியாக வலம் வந்து பிறகு அரசியலவதியாக முன்னேற்றம் அடைகிறார். வசனங்கள் பக்கம் பக்கமாக பேசப்படுகிறது பல சமயங்களில் எரிச்சலை எற்படுத்துகிறது.
ரூபாய் 25 இலட்சத்திற்கு நீதிமன்றம் போல அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, பொள்ளாச்சி,ஒரிசா மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய இடத்தில் எடுத்து உள்ளனார். நியாமான முறையில் ஒரு தேர்தலை நடத்தி இப்படத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார் இயக்குநர்.
Remove ads
ஒலிப்பதிவு
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், இவர் முதல் முறையாக விஜயகாந்த் படத்தில் பணியாற்றினார். ஆகஸ்ட் 7, 2003 அன்று வெளியிடப்பட்ட இந்த ஒலிப்பதிவில், பா. விஜய், நா. முத்துக்குமார், சினேகன் மற்றும் முத்து விஜயன் பாடல் வரிகளை எழுதினார்கள். குரும்பு என்ற யுவன் சங்கர் ராஜாவின் மற்றொரு படத்தின் ஒலிப்பதிவும் அதே நாளில் வெளியிடப்பட்டது. 'துறுதுது துறுதுது' என்ற பின்னணி இசை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
தயாரிப்பு
பி.வாசு, ராஜசேகர் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றிய அறிமுக எம்.நந்தகுமார் இப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் வசனக்கர்த்தா எழுத்தாளர் ஆர்.என்.ஆர் மனோகரன் ஒரு சிறிய பாத்திரத்தில் விவேக்கைக் கொல்ல வரும் ஒரு குண்டராக தோன்றினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது, மேலும் சில சண்டைக் காட்சிகள் ஒய்.எம்.சி.ஏ மற்றும் தேவி தியேட்டர் போன்ற உயரமான கட்டிடங்களின் மேல் மற்றும் பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஒரு தொகுப்பில் படமாக்கப்பட்டன. முன்னணி ஜோடிக்கு இடையிலான சில காட்சிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் படமாக்கப்பட்டன. அதே நேரத்தில் ஏ.வி.எம் மற்றும் பிரசாத் படப்பிடிப்பு வளாகத்தில் அமைக்கப்பட்ட தொகுப்பில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. நடன இயக்குநர் கலா நடனம் அமைத்த இந்த பாடலில் சுமார் நூறு நடனக் கலைஞர்கள் முன்னணி ஜோடியைச் சுற்றி நடனமாடினர். ஐந்து தொகுப்பில் படமாக்கப்பட்ட இந்த பாடல், ஒரே நேரத்தில் மூன்று ஒளிப்பட கருவில் படமாக்கப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் முன்னணி ஜோடியுடன் மற்றொரு பாடல் படமாக்கப்பட்டது.
Remove ads
வரவேற்பு
ஹிந்து நாள் இதழில் : "இயக்குநர் மற்றும் கதாநாயகர் முதலிய அனைவரும் படத்தின் மீது விருப்பம் இல்லாதது போல இருந்தது" என்று எழுதினார்.[2]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads