தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 49 (National Highway 49) என்பது பொதுவாக தே.நெ. 49 எனக் குறிப்பிடப்படுகிறது. இது கடற்கரை நகரங்களான தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடியினை கேரளாவின் கொச்சியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பிரபலமான பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. இதன் மொத்த நீளம் 440 கி.மீ. (270 மைல்) ஆகும்.[1]
Remove ads
வழித்தடம்
இச்சாலை கொச்சியில் தே.நெ.47-ல் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையை கடந்து பின் பாம்பன் கடற்கரையை அடைக்கிறது. இதன் பின்னர் பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் தீவை அடைகிறது. இங்கு முகுந்தராயர் சத்திரம் என்னுமிடத்தில் முடிகிறது.
முக்கிய இடங்கள்
- கொச்சி
- அடிமாலி
- மூணாறு
- போடி
- தேனி
- ஆண்டிபட்டி
- உசிலம்பட்டி
- மதுரை
- மானாமதுரை
- பரமக்குடி
- ராமநாதபுரம்
- மண்டபம்
- ராமேஸ்வரம்
- தனுஷ்கோடி (முகுந்தராயர் சத்திரம்)
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads