இராமகிருஷ்ண மடம், சென்னை

ராமகிருஷ்ணரால் நிறுவப்பட்ட ஆண்களுக்கான துறவற அமைப்பு. From Wikipedia, the free encyclopedia

இராமகிருஷ்ண மடம், சென்னைmap
Remove ads

இராமகிருஷ்ண மடம், சென்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் [1836-1886] நினைவாக சென்னை, மைலாப்பூரில் கட்டப்பட்டது இராமகிருஷ்ண மடம். இம்மடம், கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான பேலூர் மடத்தின், தென்னிந்தியாவில் அமைந்துள்ள முதல் கிளை மடம் ஆகும். இம்மடம், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி இராமகிருஷ்ணானந்தரால் தொடங்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் இராமகிருஷ்ண மடம், சென்னை., ஆள்கூறுகள்: ...
Remove ads

வரலாறு

துவக்கம்

பிப்பிரவரி மாதம், 1897ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் மேற்குலக நாடுகளில் ஆன்மீகப் பயணம் முடித்து கொல்கத்தாவிற்கு திரும்புகையில் சென்னையில் சில நாட்கள் தங்கினார். அவ்வமயம் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் பக்தர்கள், சென்னையில் இராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவாக ஒரு நிலையான மடம் கட்ட கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற சுவாமி விவேகானந்தர், மார்சு மாதம், 1897-இல் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி இராமகிருஷ்ணானந்தரை தென்நாட்டு தூதராக ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தை கட்டுவதற்கு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.[2]

ஐஸ் ஹவுசில் முதல் மடம்

சென்னை கடற்கரை ஓரத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ் ஹவுஸ் எனும் (தற்பொழுது விவேகானந்தர் இல்லம்) மூன்று மாடி கட்டிடத்தில் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் மடம் உருவாகியது. இக்கட்டிடத்தின் உரிமையாளர் பிலிகிரி அய்யங்கார், இராமகிருஷ்ணரின் தீவிர பக்தர். தனது மூன்று மாடி கட்டிடத்தை ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தின் கிளை மடமாக பயன்படுத்திக் கொள்ள தர முன்வந்தார். அக்கட்டிடத்தில் சுவாமி இராமகிருஷ்ணானந்தரின் முயற்சியால் துவக்கப்பட்ட ஆதரவற்ற மாணவர்களுக்காக மாணவர் இல்லம், இன்று ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷின் மாணவர் இல்லம், மைலாப்பூர் என்ற பெயரில் விவேகானந்தர் இல்லத்தில் இயங்கி வருகிறது.[3][4]

1907-இல் மைலாப்பூரில் ஸ்ரீ இராமகிருஷ்ண மடம்

Thumb
இராமகிருஷ்ண பரமஹம்சரின் திருவுருவச் சிலை

ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இராமகிருஷ்ண மடம், கட்டிட உரிமையாளரான பிலிகிரி அய்யங்கார் 1902-இல் இறந்து போன பிறகு, அக்கட்டிட உரிமையாளர்களுக்கு நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டதின் காரணமாக, அக்கட்டிடம் 1906 ஏலத்திற்கு வந்தது. எனவே, அக்கட்டிடத்தின் வெளிப்புற அறையில் (அவுட் ஹவுஸ்) மடத்தின் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார். பின் மைலாப்பூரில் பக்தர் ஏ.கொண்டைய செட்டியார்[5] கொடையாக வழங்கிய நிலத்தில் கட்டிடம் கட்டி இராமகிருஷ்ண மடத்தை 17-11-1907-இல் , சென்னை மைலாப்பூருக்கு மாற்றினார். இரண்டு ஆண்டுகளுள் காண்டிராக்டரின் ஏமாற்று வேலை காரணமாக மைலாப்பூர் மடத்தின் கட்டிடம் பல இடங்களில் விரிசல் கண்டது.1912-இல் சுவாமி இராமகிருஷ்ணானந்தாவிற்கு பின் இந்த மடத்தை கவணிக்க வந்த சுவாமி சர்வானந்தா, கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு, இரண்டு மாடிகள் கொண்ட விசாலமான புதிய கட்டிடத்தை நிர்மாணித்தார்.[6]

1907 முதல் 2000 வரை ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் வளர்ச்சி

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், ஸ்ரீஇராமகிருஷ்ண பரம்பரையின் தலைவரும், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் தலைமை மடத்தின் தலைவருமான சுவாமி பிரம்மானந்தா, இரண்டாம் முறையாக சென்னைக்கு வந்து மைலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தை விரிவாக்கம் செய்ய 04-08-1916-இல் அடிக்கல் நாட்டினார். 27-04-1917-இல் விரிவாக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் நினைவாக அக்கட்டிடத்திற்கு ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் என பெயர் சூட்டப்பட்டது. 2000-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீஇராமகிருஷ்ணருக்கு ஒரு புதிய பிரபஞ்சக் கோயில் கட்ட முடிவு எடுத்து கட்டிடப்பணி துவக்க 01-12-1977-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. 07-02-2000-ஆம் ஆண்டில் பிரபஞ்சக் கோயில் திறப்பு விழா நடைபெற்றது.[7]

Remove ads

மடத்தின் நடவடிக்கைகள்

பிறந்தநாள் விழாக்கள்

பிற முக்கிய சமய விழாக்கள்

மேற்படி பிறந்தநாள் விழாக்களும், சிறப்பு பூஜைகளும் வேள்விகளுடனும், தோத்திரங்கள் பாடியும், இசை நிகழ்ச்சிகளுடனும், சொற்பொழிவுகளுடனும் சிறப்பாக நடைபெறுகிறது.[9]

நூல் வெளியீடுகள் & ஆன்மீக சொற்பொழிவுகள்

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் பரம்பரையில் அமைந்த மடங்களில் சென்னை மடம் அதிக அளவில் அனைத்து ஆன்மீக நூல்கள், குழந்தைகளுக்கான் நன்னெறி கதை நூல்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது. மேலும் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை நூல் வடிவில் வெளியிட்டும் வருகின்றனர்.[10] சென்னை இராமகிருஷ்ண மடம், வேதாந்த கேசரி எனும் ஆங்கில மாத இதழும், இராமகிருஷ்ண விஜயம் எனும் மாத இதழும் முறையே 1914 மற்றும் 1921 ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. மடத்தில் வாரந்திர ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்துகின்றனர்.

1944-2006க்கு இடைபட்ட காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பிரபா என்ற தெலுங்கு மாத இதழும் அனைத்துத் தெலுங்கு நூல்களும் சென்னை மடமே வெளியிட்டது குறிப்பிடதக்கதாகும். 2006 டிசம்பரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தெலுங்கு பதிப்பகம் சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

கல்வித்துறையில் இராமகிருஷ்ண மடம்

Thumb
பழைய மடத்தில் அமைந்த கோயிலினுள் தியான மண்டத்தில் அன்னை சாரதா தேவியின் உருவப் படம்

ஆதரவற்ற அனாதை குழந்தைகள் தங்கிப் படிக்கும் உறைவிடப் பள்ளிக்கூடம் திருவல்லிக்கேனியில் 16-05-1917-இல் இராமகிருஷ்ண மடம் சார்பில் இன்று வரை நன்கு செயல்படுகிறது.

சென்னை, ஜார்ஜ் டவுனில் இருந்த சென்னை நேசனல் பெண்கள் பள்ளியின் நிர்வாகம் 1921-ஆம் ஆண்டு முதல் சென்னை இராமகிருஷ்ண மடத்தின் கீழ் வந்த்து. 1932-இல் ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்று தியாகராய நகரில் துவக்கப்பட்டது. சென்னை தியாகராயநகரில் செயல்பட்டு கொண்டிருந்த ஸ்ரீசாரதா பெண்கள் பள்ளிக்கூடம் 1938-இல் சென்னை இராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. சூன் மாதம், 1946-ஆம் ஆண்டில் மைலாப்பூரில் துவக்கப்பட்ட இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் துவக்கப்பட்டது. மடத்தின் கல்வி நடவடிக்கைகள் அதிகரிக்கவே, அந்நிறுவனங்களை வழிநடத்திச் செல்ல பல குழுக்கள் அமைக்கப்பட்டது. சென்னை இராமகிருஷ்ண மட்த்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இதர கல்வி நிறுவனங்கள்:

  • ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், விவேகானந்தர் நூற்றாண்டு விழா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை [11]
  • ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், தேசியப் பள்ளி, சென்னை.[12]
  • 32,000 நூல்கள் மற்றும் 300 இதழ்களுடன் கூடிய பொது நூலகம்.
  • பொறியியல் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலான ஒரு நூல் வங்கி

இலவச மருத்துவ சேவையில் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம்

Thumb
சென்னை, இராமகிருஷ்ண மடத்தில் அமைந்துள்ள பிரபஞ்சக் கோயில்
  • பொதுமக்கள் நலனுக்காக ஆங்கில முறை மருத்துவமனை மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகள், ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை சார்பில் இயங்கிவருகிறது.
  • மடத்தின் சார்பில் இயக்கப்படும் வாராந்திர நடமாடும் மருத்துவக் குழு, ஆண்டிற்கு 10,000 நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குகிறது.[13]
  • தொழு நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவம் அளிக்கிறது.[14]
  • அருகில் உள்ள கிராமங்களில் இலவச கண் நோய் மருத்துவ முகாம்கள் நடத்திவருகிறது.

நிவாரணப் பணிகள் மற்றும் புனர்வாழ்வு மையங்கள்

1928 மற்றும் 1948-ஆம் ஆண்டுகளில் மைலாப்பூரில் குடிசைபகுதிகள் எரிந்த பொழுது, இராமகிருஷ்ண மடம், சென்னை சார்பில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு, அரசிடமிருந்து நிலம் பெற்று இராமகிருஷ்ணபுரம் எனும் குடியிருப்பை இலவசமாக கட்டி வழங்கியது.[15] சென்னை, இராமகிருஷ்ண மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிவாரணப்பணிகள்;

மேலதிகத் தகவல்கள் மாதம்/ஆண்டு, பாதிக்கப்பட்ட கிராமங்கள்/மாவட்டம் ...

கிராமப்புற வளர்ச்சியில் இராமகிருஷ்ணமடம், சென்னை

  • 2004-ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின் ஒரு வருட மருத்துவ செவிலியர் உதவியாளர் பயிற்சி பள்ளி 2004ஆம் ஆண்டு முதல் மடம் நடத்தி வருகிறது. இதுவரை 1200 பயிற்சி பெற்ற மருத்துவ செவிலிய உதவியாளர்களை உருவாக்கியுள்ளது.[18]
  • திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமபுறப் பெண்களின் முன்னேற்றத்திற்காக இலவச கணிப்பொறி பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

பதிப்பகம்

  • ஞானதீபம் [19]
Remove ads

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads