முதலாம் பௌத்த சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதல் பௌத்த சங்கம், கௌதம புத்தர் கிமு 483ல் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, புத்தரின் தலைமைச் சீடரான மகாகாசியபர் தலைமையில் கிமு 543ல் மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆதரவில், இந்தியாவின் பிகார் மாநிலத்தில் உள்ள ராஜகிரகத்தில் நடைபெற்றது.[1]


முதல் பௌத்த சங்கக் கூட்டத்தில், புத்தரின் முதன்மைச் சீடர்கள் உட்பட ஏறத்தாழ 500 அருகதர்கள் கலந்து கொண்டனர்.[2] முதல் பௌத்த சங்கக் கூட்டத்தில் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகளை சுத்தபிடகம் [3], அபிதம்மபிடகம்[4], மற்றும் விநயபிடகம்[5] என மூன்று தலைப்புகளில் புத்தரின் முதன்மைச் சீடர்களான ஆனந்தர், மகாகாசியபர் மற்று உபாலி ஆகியோர் தொகுத்தனர். இம்மூன்று தொகுப்புகளைச் சேர்த்து திரிபிடகம் என்று அழைப்பர். இதுவே பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும் [6].
மேலும் பௌத்த விகாரையில் வசிக்கும் பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் நடத்தைகளை நெறிப்படுத்துவதற்கும் மற்றும் பௌத்த உபாசகர்கள் இல்லற வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அறங்களையும் நெறிப்படுத்துவதற்குமான விதிகளை வகுப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
