அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு

From Wikipedia, the free encyclopedia

அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டுmap
Remove ads

30.5180°N 77.8482°E / 30.5180; 77.8482

விரைவான உண்மைகள் செய்பொருள், எழுத்து ...
Thumb
கல்சி கல்வெட்டில் எலனியக் காலத்திய கிரேக்க மன்னர்களான இரண்டாம் அந்தியோசூஸ், இரண்டாம் தாலமி, இரண்டாம் அந்தியோசூஸ் கோன்டாஸ், சிரேனின் மகஸ், இரண்டாம் அலெக்சாண்டர் எபிரஸ் ஆகியவர்கள் பெயர் மற்றும் ஆண்ட நாடுகள் குறிக்கப்பட்டுள்ளது
Thumb
கல்சி கல்வெட்டு உள்ளிட்ட அசோகர் கல்வெட்டுக்கள் மற்றும் தூபிகளைக் காட்டும் வரைபடம்

அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு (Rock edicts of Khalsi),இந்தியாவின் வடக்கில் இமயமலையில் உள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள கல்சி எனும் கிராமத்தில் உள்ளது. இப்பாறைக் கல்வெட்டு பேரரசர் அசோகர் கிமு 250-இல் நிறுவினார். இக்கல்வெட்டு பிராமி எழுத்துக்களைக் கொண்டு பிராகிருத மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கடிமான பளிங்குக் கல் பாறையில் நிறுவப்பட்டது. [1] இக்கல்வெட்டை இந்தியத்தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் 1850-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் இதுவும் ஒன்றாகும்.

Remove ads

கல்வெட்டின் குறிப்புகள்

கல்வெட்டின் கிழக்கு முகத்தில் 1 முதல் 12 வரிகள் கொண்டது. வலது பக்கத்தில் (வடக்கு முகம்) ஒரு யானை உருவம் மற்றும் பிராமி எழுத்தில் கஜதாமா என ஒரு சொல்லும் செதுக்கப்பட்டுள்ளது.[1][2]

கல்வெட்டின் 13-வரியில் எலனியக் கால கிரேக்க மன்னர்களான இரண்டாம் அந்தியோசூஸ், இரண்டாம் தாலமி, இரண்டாம் அந்தியோசூஸ் கோன்டாஸ், சிரேனின் மகஸ், இரண்டாம் அலெக்சாண்டர் எபிரஸ் ஆகியவர்கள் பெயர் மற்றும் ஆண்ட நாடுகள் குறிக்கப்பட்டுள்ளது.[3] மேலும் அசோகரின் ஆட்சியில் கிமு 260 மற்றும் கிமு 230-ஆம் ஆண்டு காலத்திய நிகழ்வுகள் குறித்துள்ளது.[3][4] and very damaged in the Mansehra inscription.[5]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads