அன்வார் இப்ராகிம் அமைச்சரவை
மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை From Wikipedia, the free encyclopedia
Remove ads
அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Anwar Pertama; ஆங்கிலம்: Anwar Ibrahim First Cabinet; சீனம்: 安瓦尔·易卜拉欣第一内阁); என்பது மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை ஆகும்.
மலேசியாவின் 10-ஆவது பிரதமராக அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட்டு எட்டு நாட்களுக்குப் பிறகு, 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, இந்த 23-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர், மற்ற அரசியல் கூட்டணிகளுடன் இணைந்து ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (Unity Government) அமைக்குமாறு மலேசியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா (Al-Sultan Abdullah) அவர்கள்; அன்வார் இப்ராகிமைக் கேட்டுக் கொண்டார்.[1]
2022 டிசம்பர் 3-ஆம் தேதி, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு அமைச்சர்களின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.[2]
Remove ads
பொது
அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கு பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும், அந்த அழைப்பை பெரிக்காத்தான் நேசனல் நிராகரித்து; எதிர்க்கட்சியாகச் செயல்பட முடிவு செய்தது.
எனவே, இந்த அமைச்சரவை பாக்காத்தான் ஹரப்பான் (PH) தலைமையில் ஒரு மாபெரும் கூட்டணி அரசாங்கம் நிறுவப்பட்டு இருப்பதை பிரதிபலிக்கின்றது. இந்த அமைச்சரவைக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரவை (மலாய்: Kabinet Perpaduan Nasional; ஆங்கிலம்: National Unity Cabinet; என்று பெயரிடப்பட்டுள்ளது.
Remove ads
அமைவு
2022 டிசம்பர் 3-ஆம் தேதி நிலவரப்படி, ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சர்கள்:[3]
பாக்காத்தான் (15) | பாரிசான் (6) | ஜிபிஎஸ் (5) | ஜிஆர்எஸ் (1) | சுயேட்சை (1) |
|
|
| ||
அமைச்சர்கள்
Remove ads
துணை அமைச்சர்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads