கம்மவார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்மவார் (Kammas) (கம்மவார் நாயுடு என்றும் கம்மவார் நாயக்கர் என்றும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகத்தில், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, கோவை, ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர், நாயுடு, ராவ், சௌதரி, ராயுடு மட்டும் ரெட்டி ஆகியன இவர்களின் பட்டங்களாகும்.[1][2][3]
Remove ads
வரலாறு
தற்போதைய கம்ம சமூகத்தினர், கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கம்மநாடு பகுதியில் விவசாயம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.[4][5] முந்தைய குண்டூர் மாவட்டத்தில் (பின்னர் 1970 இல் ஓங்கோல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட மூன்று துணை மாவட்டங்கள் இதில் அடங்கும்) குண்டலகம்மா நதிக்கும், கிருஷ்ணா நதிக்கும் இடையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, பண்டைய காலத்திலிருந்தே ஒரு அடையாளத்தைக் கொண்டிருந்தது. "கம்மா" என்ற சொல் இப்பகுதியின் எல்லைகளை உருவாக்கிய இரண்டு ஆறுகளைக் குறிக்கிறது[6] அல்லது இப்பகுதியில் ஒரு காலத்தில் பரவலாக இருந்ததாக நம்பப்படும் சங்ககம்மாக்கள் எனப்படும் புத்த மடாலய நிறுவனங்களைக் குறிக்கிறது.[7]
இப்பகுதி மக்கள் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததால், அவர்கள் பெரும்பாலும் கம்மா சமூகம் (கம்மா-குல) என்று குறிப்பிடப்பட்டனர். கம்மா-பிராமண, கம்மா-கோமதி, கம்மா-ஸ்ரேஷ்டி மற்றும் கம்மா-காப்பு போன்ற சொற்கள் கல்வெட்டுகளில் மக்களின் விளக்கங்களாக சான்றளிக்கப்பட்டுள்ளன.[8][9][10]
Remove ads
அரசியல்
ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு, புதிய தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, கம்மாக்களும், ரெட்டிகளும் மாநிலத்தில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தினர்.[11] 1953 முதல் 1983 வரை, பல கம்மாக்களும் ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசுடன் தங்களை இணைத்துக் கொண்டு கட்சிக்கு நிதி மற்றும் ஊடக ஆதரவை வழங்கினர்.[12] 1980களில், தெலுங்கு தேசக் கட்சியை, அப்போதைய தலைவர் என். டி. ராமராவ் நிறுவினார். இதன் மூலம் அவர்கள் மாநில மற்றும் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தனர்.[13]
Remove ads
அரச மற்றும் தளபதி வம்சங்கள்
- முசுனூரி நாயக்கர்கள்
- பெம்மசானி நாயக்கர்கள்
- ராவிள்ள நாயக்கர்கள்
- சாயபனேனி நாயக்கர்கள்
- சூர்யதேவர நாயக்கர்கள்
குறிப்பிடத்தக்க நபர்கள்
அரசியல்வாதிகள்
- என். டி. ராமாராவ் - நிறுவனர், தெலுங்கு தேசம் கட்சி
- நா. சந்திரபாபு நாயுடு - தலைவர், தெலுங்கு தேசம் கட்சி
- வைகோ, தலைவர், மதிமுக
- ரா. கிருஷ்ணசாமி நாயுடு, விடுதலைப் போராட்ட வீரர்
- பா. ராமச்சந்திரன் - முன்னாள் ஒன்றிய மின்துறை அமைச்சர், கேரள ஆளுநர்
- இரா. பிரபு - முன்னாள் ஒன்றிய வேளாண்துறை இணை அமைச்சர்
- எஸ். ஆர். பாலசுப்ரமணியன் - முன்னாள் ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர், முன்னாள் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர்
- ஆற்காடு வீராசாமி - முன்னாள் மின்துறை அமைச்சர்
- டி. கே. எம். சின்னையா - முன்னாள் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
- கே. பாண்டுரங்கன் - முன்னாள் தொழில் துறை அமைச்சர்
- ப. வே. தாமோதரன் - முன்னாள் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
- ஆர். காந்தி - தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர்
- பி. வி. ரமணா - முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்
திரைப்படத்துறை
- என். டி. ராமராவ், முன்னாள் திரைப்பட நடிகர்
- அக்கினேனி நாகேஸ்வர ராவ்
- நந்தமூரி பாலகிருஷ்ணா, திரைப்பட நடிகர்
- ஜூனியர் என்டிஆர், திரைப்பட நடிகர்
- பாக்யராஜ், திரைப்பட நடிகர்
- அக்கினேனி நாகர்ஜூனா, திரைப்பட நடிகர்
- மகேஷ் பாபு, திரைப்பட நடிகர்
- லீலா நாயுடு, முன்னாள் திரைப்பட நடிகை
- ஸ்ரீதேவி, முன்னாள் திரைப்பட நடிகை
- நாக சைதன்யா, திரைப்பட நடிகர்
விளையாட்டுத்துறை
விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை
Remove ads
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads