நாயக்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாயக்கர் (Nayak) என்பது மத்தியகால இந்திய வரலாற்றில் குறிப்பாக விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தை ஆளும் ஆளுநர்களை நாயக் அல்லது நாயக்கர்கள் என அழைக்கப்பட்டனர்.[1] மேலும் நாயக்கர் எனும் சொல் தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் குலப்பெயராகவும் உள்ளது.

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...

விஜயநகர மன்னர்களால் பேரரசுக்கு உட்பட்ட மாகாணங்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட மண்டலேஸ்வரர்கள், பாளையக்காரர்கள் (குறுநிலத்தை ஆண்டவர்கள்) நாயக்கர் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். நாயக்கர்கள் காப்பு, கொல்லா, கம்மா[2] எனப்படும் இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாயக்கர் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் வாழுகிறார்கள்.

ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு, ராஜகம்பள கொல்லா, பலிஜா, கவரா, கம்மா[3], தமிழகத்தில் வன்னியர்களின் பெரும் பகுதியினர், நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவர், முத்தரையர், துளுவ வெள்ளாளர்களில் சிலர் அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.

நாயக்கர்கள் இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.

Remove ads

சொல்லிலக்கணம்

  • நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
  • நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
  • நாயக்கர் = நாயர் (மலையாளம்)
  • நாயக்கர் = நாயகே (சிங்களம்)
  • நாயக்கர் = நாயக் (மராத்தி)
  • நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)

பிரிவுகள்

தமிழகத்தில் நாயக்கர் பட்டத்தினை பயன்படுத்தும் சமூகத்தினர் பட்டியல் பின்வருவன.

கவரா

கவரா எனப்படுவோர் தமிழகத்தில் வாழும் ஒரு வணிக சமூகமாகும். இச்சமூகத்தினர் பலிஜா சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[4] பலிஜா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் கவரை என்பதாகும்.[5] கவரைகள், வீர வளஞ்சியர் தர்மத்தின் பாதுகாவலர்களாக இருந்தனர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[6] சோழன் பூர்வ பட்டயம் எனும் வரலாற்று நூலின்படி, சோழர் காலத்தில் செட்டிமையான பல குடிகளுக்கு தலைவர்களாக கவரை வளஞ்சியர்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை குறிப்பிடுகிறது.[7] வளஞ்சியர்கள், சிவபெருமானை கவரேசுவரன் என்ற பெயரில் வழிபட்டதன் காரணமாக கவரைகள் என்ற பெயரைப் பெற்றதாக வரலாற்றாளர்கள்‎ குறிப்பிடுகிறார்கள்.[8] வளஞ்சியர் என்பது தற்கால பலிஜா என்ற வணிக மக்களைக் குறிப்பதாகும்.[9] கவரைகள், பலிஜா சமூகத்துடன் திருமண உறவுகளை கொண்டுள்ளார்.[10] இவ்விரு சமூகத்தவர்களும் கௌரி விரதத்தைக் கடைபிடிப்பது வருகின்றனர்.[11]

கம்மவார்

கம்மவார் எனப்படுவோர் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார்.[12] இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், தேனி, கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர்.[13] இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். கம்மநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். மேலும் காகதீய, விஜயநகர மன்னர்கள் காலத்திலும் படைத்தளபதிகளாகவும் படைவீரர்களாகவும் இருந்து வந்துள்ளனர். தமிழகத்தில் இளையரசனேந்தல், குருவிகுளம், நெய்க்காரப்பட்டி முதலிய ஜமீன்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர்.

கொல்லா

கொல்லா இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் எட்டு லட்சத்து ஆறாயிரத்து நானுறு பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது. ஆந்திராவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 7% சதவீத மக்கள் இச்சமுகத்தினர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ராஜகம்பள நாயக்கர் பிரிவில் வரும் கொல்லவார்கள் (கொல்லா+வாரு=கொல்லவாரு) "வாரு"என்பது "அவர்கள்" என்று தெலுங்கில் பொருள். உதாரணம் கம்மா+வாரு=கம்மவார்.

வெலமா

தமிழ்நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.

முத்துராஜா நாயுடு[14][15][16][17]

முத்துராஜா நாயுடு (Muthuraja Naidu) அல்லது முத்திரிய நாயுடு (Muthiriya Naidu)[18] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இச் சமூகத்தினர் செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர்.[19]

போயர்

போயர் எனப்படுவோர் தமிழகத்தில் வாழும் ஒரு வேட்டை சமூகமாகும். இவர்கள் தாங்கள் கண்ணப்ப நாயனார் வழிவந்தவர்கள் என்கின்றனர். இம்மக்கள் பேடர், வால்மீகி போன்ற பெயர்களிலும் அறியப்படுகின்றனர். விஜயநகரப் பேரரசு காலத்தில் அவர்களின் படைகளுடன் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறினார்கள்.

தொட்டிய நாயக்கர்

தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். தாங்கள் கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். [சான்று தேவை]இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.

இவர்கள் கொல்லாவின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை] இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வைத்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர். இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 52 பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டதே. விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்க்கை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.[20]

தொட்டிய நாயகர்களின் கிளை

தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:

தெலுங்கு பேசுவோர் :

  1. கொல்லவார் - கோபாலர் மரபு -சங்கம வம்சாவளிகள்
  2. சில்லவார் - ஒழுக்கம் பராமிப்பவர்
  3. தோக்கலவார் - செல்வம் சேர்த்தல்- ஆற்றினை கடந்து செல்லும் நிலையில் ஆநிரையின் தோக்கலு (வால்) பிடித்து சென்றவர்கள் .
  4. பாலவார் -பாலமு என்றால் படை - படை வீரர்கள்
  5. வேகிளியார் (சில்லவார் மற்றும் பாலவார் கலந்து குறிக்கப்பட்ட இனம்) - சுத்தமானவர்கள் என்று பொருள், மேலும் வேலியை போல நாட்டினை காத்தவர்கள்.
  6. வல்லக்கவார் (ஏற கொல்லா) - கிருஷ்ணர் காட்டினை எரிக்கையில் தீயில் இருந்து வந்தவர்கள் , தீ - சிவப்பு என்பதால், சிவப்பு கொல்லா தெலுங்கில் ஏற கொல்லா என்றானது.[சான்று தேவை]
கன்னடம் பேசுவோர்
  1. காப்பிலியர் - [கன்னட காப்பு இனம்] காவல் காத்தவர்கள் - ஹொய்சாலா மரபினர்- விஜயநகர மரபின் முக்கிய குழுவினர்.[சான்று தேவை]
  2. அனுப்பர் - அல்லி குலத்தோர் -மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்). இவர்களின் வழிவந்தவர்கள் அல்லி குல அனுப்பர்கள் விஜயநகர மரபினர்.[சான்று தேவை]
  3. குருமர் - குரி என்றால் ஆடு, ஆடுகளை மேய்க்கும் மரபினர் - விஜயநகரமும் இவர்கள் இல்லாமல் இல்லை.

இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .

தெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர்.

ஆந்திராவில் கொல்லா என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர் (குடியான சாதி) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும், ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர்.[சான்று தேவை]

கிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது.[சான்று தேவை]

Remove ads

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்[23]

காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்

கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்

இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .

நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள்

நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :

  • திருமலை நாயக்கர் மகால் - திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தமிழகத்தில் காணக்கிடைக்கும் ஒரே கோட்டை.
  • திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
  • நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
  • திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
  • வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
  • உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
  • சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு

குறிப்பிடத்தக்க நபர்கள்

பலிஜா (கவரா) இனம்

கொல்லா (இராஜகம்பளம்) இனம்

கம்மவார் இனம்

வெலமா இனம்

பேடர் (போயர்) இனம்

Remove ads

மேலும் படிக்க

  1. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
  2. கண்டி நாயக்கர்
  3. ராஜகம்பளம்
  4. பலிஜா
  5. போயர்
  6. கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்
  7. பனாஜிகா
  8. முத்துராச்சா
  9. வளஞ்சியர்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads