மாநிலங்களவைத் தேர்தல்கள் 2008
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2008 (2008 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2008ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இந்தியாவில் 15 மாநிலங்களிலிருந்து 55 உறுப்பினர்களையும்,[1] கர்நாடகாவிலிருந்து நான்கு உறுப்பினர்களையும், மிசோரம் மற்றும் அருணாசலப் பிரதேசத்திலிருந்து ஒரு உறுப்பினரையும்,[2] மற்றும் இரண்டு மாநிலங்களிலிருந்து 11 உறுப்பினர்களையும் [3] மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
Remove ads
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
2008ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பட்டியல் முழுமையடையவில்லை.
Remove ads
இடைத்தேர்தல்
பீகார்,[4] நாகாலாந்து, மேற்கு வங்காளம் மற்றும் மீண்டும் பீகார்,[5] மேற்கு வங்காளம்,[6] மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியான இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[7]
- பீகாரில் உறுப்பினர் 18 திசம்பர் 2007-ல் மோடியூர் ரஹ்மான் மரணமடைந்த காலியாக உள்ள இடத்திற்கு 26 மார்ச் 2008 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் எஜாசு அலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் சூலை 07, 2010 வரை இருந்தது.
- நாகாலாந்தில் சூன் 26, 2008 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் பதவி விலகிய டி. ஆர். ஜிலியாங் பதவி விலகியதால் நடைபெற்றது. இவரின் பதவிக்காலம் 02/04/2010 அன்று வரை இருந்தது. மேற்கு வங்களாத்தின் முகர்ஜி மே 6, 2008 அன்று பதவி விலகியதால் மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இவரின் பதவிக் காலம் ஏப்ரல் 2, 2012 வரை இருந்தது. பீகாரின் உறுப்பினர் ஜெய் நரேன் பிரசாத் நிஷாத் 26 மார்ச் 2008 அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதவிக்காலம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவரின் பதவிக்காலம் 19 சூலை 2010 அன்று வரை இருந்தது. நாகாலாந்திலிருந்து தேசிய மக்கள் முன்னணியின் எச். கெகிகோ சிமோமி, பாஜகயின் ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து பொதுவுடைமை கட்சியின் ஆர். சி. எசு. சிங் ஆகியோர் உறுப்பினர்களானார்கள்.
- அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தேபப்ரதா பிசுவாசு செப்டம்பர் 23, 2009-ல் பதவி விலகியதால் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பதவிக்கு 21 நவம்பர் 2008 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினைச் சேர்ந்த பருண் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்கால ஏப்ரல்2, 2014-ல் முடிவடைந்தது.
- 17/10/2008 அன்று பாஜகவின் உறுப்பினர் லட்சுமிநாராயண் சர்மா மரணமடைந்ததால், மத்தியப் பிரதேசத்திலிருந்து காலியாக உள்ள இடத்துக்கு 22 சனவரி 2009 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பாஜகவின் நரேந்திர சிங் தோமர் உறுப்பினரானார். இவரது பதவிக் காலம் சூன் 29, 2010 வரை இருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
