சிங் அரசமரபு
1636-1912/1917 வரை கிழக்காசியாவில் ஆட்சி புரிந்த சீன அரசு மரபு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங் அரசமரபு (Qing Dynasty), சீன மொழி: 清朝 சிங் சாவ்) அல்லது சிங் பேரரசு (大清 டா சிங்) என்பது, மங்கோலியர்களின் யுவான் அரசமரபுக்கு பின்னர் சீனாவை ஆண்ட இறுதி சீன அரச மரபு ஆகும். 1644 தொடக்கம் 1912 ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்திய இவ்அரசமரபுபை மஞ்சு அரசமரபு எனவும் அழைப்பதுண்டு. இது, இன்றைய வடகிழக்குச் சீனாவைச் (மஞ்சூரியா) சேர்ந்த மாஞ்சு என்ற துங்குசிய இனக்குழுவான நுர்ஹாசியால் நிறுவப்பட்டது. 1644 இல் தொடங்கி சீனாவையும் அதைச் சூழ்ந்த பகுதிகளையும் உள்ளடக்கிய பேரரசானது. தொடக்கத்தில் பிந்திய ஜின் வம்சம் என்ற பெயரில் 1616 இல் உருவாகி 1636 இல் சிங் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1644 இல் இந்த அரசமரபு பெய்ஜிங்கைக் கைப்பற்றியது. 1646 ஆம் ஆண்டளவில் இதன் ஆட்சி இன்றைய சீனாவின் பெரும் பகுதிகளுக்கு விரிவடைந்தது. எனினும் 1683 ஆம் ஆண்டிலேயே முழுச் சீனாவையும் இதன் ஆட்சிக்குள் கொண்டுவர முடிந்தது. 19-ஆம் நூற்றாண்டில் சீனப் பேரரசுக்கு எதிராக அபினிப் போர்கள் பிரித்தானியப் பேரரசு நடைபெற்றது. நாஞ்சிங் உடன்படிக்கையின் படி, போர் ஈட்டுத்தொகையாக சீனப் பேரரசு ஆங்காங் தீவை பிரித்தானியர்களுக்கு வழங்கியது.[1][2][3]
இதன் ஆட்சிக்காலத்தில் சிங் அரசமரபு சீனக் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து விட்டது. இதன் படைபலம் 1800 களில் பெரிதும் குறைந்துவிட்டதுடன், வெளிநாட்டு அழுத்தங்கள், உள்நாட்டுக் குழப்பங்கள், போர்த் தோல்விகள் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டியும் ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பின் சிங் வம்சம் சரியத் தொடங்கியது. சின்ஹாய்ப் புரட்சியைத் தொடர்ந்து, பேரரசர் புயியின் சார்பில் பேரரசி டொவேஜர் லோங்யு ஆட்சி உரிமையைக் கைவிட்டபோது சிங் அரசமரபு முடிவுக்கு வந்தது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads