தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

'இயல் விருது' எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி சிறப்பிக்கிறது From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் என்பது கனடா, தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பினால் 2001-ஆம் ஆண்டு தொடங்கி, ஆண்டு தோறும் வழங்கப்படும் இலக்கிய விருதுகள் ஆகும்.

இயல் விருது

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்தவர்களாக அவர்கள் கருதும் தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு, 'இயல் விருது' எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி சிறப்பிக்கிறது.

இந்தச் சாதனை விருது பாராட்டுக் கேடயமும், 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. உலகளாவிய ஆலோசனைக் குழு ஒன்றின் பரிந்துரையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும். இந்த வாழ்நாள் விருது ஒரு படைப்பாளிக்கோ, கல்வியாளருக்கோ, நூல்வெளியீட்டாளருக்கோ, விமர்சகருக்கோ, வேறு ஏதேனும் ஒரு வகையில் சிறந்த தமிழ் தொண்டாற்றியதாக அவர்கள் கருதுபவர்களுக்கோ அளிக்கப்படும்.

இதுவரை வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக இயல் விருது பெற்றவர்கள்:

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது பெற்றவர் ...
Remove ads

புனைவுக்கான விருது

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது பெற்றவர் ...
Remove ads

அபுனைவுக்கான விருது

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது பெற்றவர் ...

கவிதைக்கான விருது

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது பெற்றவர் ...
Remove ads

மொழிபெயர்ப்பு விருது

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மொழிபெயர்ப்பாளர் ...
Remove ads

தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது

தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ்க் கணிமைக்கான வாழ் நாள் பங்களிப்பு ஆற்றியோராக தாங்கள் கருதுவோருக்கு தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதும் வழங்குகிறது.

தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றோர்:

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது பெற்றவர் ...
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது பெற்றவர் ...
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது பெற்றவர் ...
Remove ads

சிறப்பு விருதுகள்

ஆண்டு தோறும் வழங்கும் விருதுகளைத் தவிர, முக்கியமான இலக்கியப் பங்களிப்புகளுக்குத் தனியாக அவ்வப்போது சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. .

திசம்பர் 2006: சி.ஜே.கனகரத்னத்திற்கு அவரது இலக்கிய விமர்சனங்களுக்காக முதல் விருது வழங்கப்பட்டது.

யூலை 2010: சிகாகோ பல்கலைக்கழகத்தில், துணைப் பேராசிரியராகவுள்ள சஸ்ச்சா எபெலிங்-குக்கு (Sascha Ebeling), அவரது தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக, குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டு தமிழ் கலாச்சாரம், கல்வெட்டுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக ஜூலை 2010-ல் இவ்விருது வழங்கப்பட்டது.

யூலை 2013: இலங்கையிலிருக்கும் நாவந்துறையைச் சேர்ந்த ஆசீர்வாதம் தம்பதியினருக்கு, தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்புக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்காக டொராண்டோவில் வழங்கப்பட்டது.

யூலை 2015: சோமசுந்தரம்பிள்ளை. பத்மநாதன் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்திலும், மொழிபெயர்ப்பிலும் அயராது உழைத்து தமிழ் மேம்பாட்டிற்காக சேவை ஆற்றியதற்காகவும், முனைவர் ப்ரெண்டா பெக் அவர்களுக்கு மற்றவர்களுக்கு முன்மாதிரியான தமிழுக்கான அவரின் உயரிய சேவைக்காகவும் டொறொன்ரோவில் வழங்கப்பட்டது

யூலை 2016:   தமிழிற்கு அளித்த முன்மாதிரியான சேவைகளுக்காக டேவிட் ஷூல்மன் அவர்களுக்கும்,  ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காக அயராது சேவையாற்றியதற்காக இரா. இளங்குமரன் அவர்களுக்கும் சிறப்பு இலக்கியச் சாதனை விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது

யூன் 2017: மறைந்த கவிஞர் செழியனுக்கும் தி. ஞானசேகரன் அவர்களுக்கும் முனைவர் நிக்கோலப்பிள்ளை சவேரி அவர்களுக்கும் இலக்கியச் சாதனைக்கான் சிறப்பு விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது.

யூன் 2018: ம. நவீன் அவர்களுக்கும் திரு எஸ். திருச்செல்வம் அவர்களுக்கும் இலக்கியச் சாதனைக்கான் சிறப்பு விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது

2020: திரு பி. ஜே திலீப்குமார் மர்றும் திரு வீரகத்தி சுதர்சன்

2022: வ. ந. கிரிதரன் அவர்களுக்கு இலக்கிய சாதனை விருது

2023: முனைவர் பார்வதி கந்தசாமி அவர்களுக்கு இலக்கியம் மற்றும் சமூகப்பணி சாதனை விருது.[12]

Remove ads

கல்வி உதவித் தொகை

விருதுகளைத் தவிர, கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தில் படிப்பவர்களுக்கு கட்டுரைப் போட்டி வைத்து, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையை எழுதியவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுவரை இந்த உதவித்தொகை பெற்றவர்கள்:

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads