சு. வெங்கடேசன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சு. வெங்கடேசன் (Su. Venkatesan, பிறப்பு: மார்ச் 16, 1970) என்பவர் ஓர் எழுத்தாளரும், அரசியல்வாதியும், இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவராக உள்ளார்.[1]
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியை சேர்ந்த விவசாயி இரா. சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு 1970 மார்ச் 16 அன்று மகனாகப் பிறந்தார்.[2] இவர் ஹார்விப்பட்டி நடுநிலைப்பள்ளியிலும், திருநகர் எம்.எம்.மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கல்வியை பயின்றார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989-இல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.[3] இவர் செம்மலர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[4] இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[5] இவர் 1998-இல் பி.ஆர். கமலா என்பவரை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.[6] இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[7]
Remove ads
அரசியல் செயல்பாடுகள்
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார்.[8] தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்ததில் முதன்மை பங்கு வகித்தவர்.[9] மாமதுரை போற்றுவோம் என்ற கலை விழாவை நடத்தியதில் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர்.[10] தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். சல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிப் பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.[11] 2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு,1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]
மதுரை மக்களவை உறுப்பினராகச் செயல்பாடுகள்
- மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.[13]
- தமிழ் நாகரிகம் உருவான காலத்தைப் பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டு என மாற்ற செய்திடவேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.[14]
- மக்கள் சந்திப்பு இயக்கம் எனும் பெயரில் மதுரை மக்களவை தொகுதிக்கு உட்பட 124 ஊராட்சி, 2 பேரூராட்சி, மேலூர் நகராட்சி, மதுரை மாநகராட்சி பகுதிகளில் தொடா்ந்து 14 மாதங்களாக சிறப்பு முகாம்களை நடத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.[15]
Remove ads
படைப்புகள்
புதினங்கள்
- காவல் கோட்டம் (2008)
- சந்திரஹாசம் (2015)
- வீரயுக நாயகன் வேள்பாரி (2019)
கவிதைகள்
- ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (1989)
- திசையெல்லாம் சூரியன் (1990)
- பாசி வெளிச்சத்தில் (1997)
- ஆதிப் புதிர் (2000)
புத்தகங்கள்
- கலாசாரத்தின் அரசியல் (2001)
- மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள் (2003)
- கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (2003)
- மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (2003)
- ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை (2004)
- உ.வே.சா. சமயம் கடந்த தமிழ் (2005)
- அலங்காரப் பிரியர்கள் (2014)
- கீழடி (2017)
- வைகை நதி நாகரிகம் (2018)
- கதைகளின் கதை (2019)
- இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம் (2022)
மொழிபெயர்ப்புகள்
- இந்தி இந்துத்துவா இந்துராஜ்ஜியம் (சீத்தாராம் யெச்சூரி)
ஆங்கில நூல்கள்
- Chandrahasam (2015)
வகித்த பதவிகள்
- 17வது மக்களவை உறுப்பினர் (2019)
- இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்
- கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்
- மதுரை விமான நிலைய ஆலோசனை குழுவின் துணை தலைவர்
- சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் (2022)
- தமுஎகச மாநிலத் தலைவர் (2018 - 2022)
- சிபிஎம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் (2018 - 2022)
- தமுஎகச மாநில பொதுச்செயலாளர் (2011 - 2018)
- தமிழக அரசின் கீழடி அகழாய்வு ஆலோசனைக் குழு உறுப்பினர் (2019)
Remove ads
விருதுகள்
- ஆனந்த விகடன் விருதுகள் 2008 - சிறந்த நாவல் - காவல் கோட்டம்[16]
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2010 புனைவுக்கான விருது - காவல் கோட்டம்[17]
- சாகித்திய அகாதமி விருது 2011 - காவல் கோட்டம்[18]
- மலேசியா டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் 2020 - அனைத்துலக சிறந்த படைப்பு விருது - வீரயுக நாயகன் வேள்பாரி[19]
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019 இயல் விருது - வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது[20]
- நொய்யல் இலக்கிய விருது - காவல் கோட்டம்[21]
- ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018 - சிறந்த நாவல் - வீரயுக நாயகன் வேள்பாரி[22]
- நியூஸ் 18 தமிழ்நாடு மகுடம் விருதுகள் 2019 - சிறந்த எழுத்தாளர் - வீரயுக நாயகன் வேள்பாரி[23]
- புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2012 - நம்பிக்கை நட்சத்திரம்[24]
- சி. கே. கே. அறக்கட்டளை இலக்கிய விருது 2023 - வீரயுக நாயகன் வேள்பாரி[25]
- கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் 2010 - சிறப்புப் பரிசு - காவல் கோட்டம்[26]
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள் - காவல் கோட்டம்[27]
Remove ads
போட்டியிட்ட தேர்தல்கள்
திரைப்படத் துறைப் பங்களிப்புகள்
தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் நாவலின் முக்கிய பகுதிகளைத் தழுவியே படமாக்கப்பட்டது.[28]
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.[29]
இவர் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சி நடைபெறுகிறது.[30]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads