1536
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1536 (MDXXXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 7 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் முதலாம் மனைவி அராகனின் கேத்தரின் இறந்தார்.
- பெப்ரவரி 2 - எசுப்பானியர் பெத்ரோ டெ மெண்டோசா புவெனஸ் ஐரிஸ் நகரக் கண்டுபிடித்தார்.
- ஏப்ரல் 30 - திரிபுக் கொள்கை விசாரணை போர்த்துகலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மே 2 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவி ஆன் பொலின் விபச்சாரம், தேசத்துரோகக் குற்றச்சாடுகளுக்காகக் கைது செய்யப்பட்டார்.
- மே 17 - ஆன் பொலினுடன் விபசாரம் செய்த குற்றச்சாட்டுக்களுக்காக அவரது சொந்த சகோதரர் ஜோர்ஜ் பொலின் உட்பட ஐந்து பேர் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டனர்.
- மே 19 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி ஆன் பொலின் இலண்டன் கோபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
- மே 30 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஜேன் சீமோர் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
- பிரான்சின் முதலாம் பிரான்சிசு மன்னருக்கும், புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசிற்கும் இடையில் போர் மீண்டும் ஆரம்பித்தது. பிரான்சிசு துரினைக் கைப்பற்றினான்.
- இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மடாலயங்களைக் கலைக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து இங்கிலாந்தின் பல சமயக் கட்டடங்கள் மூடப்பட்டன.
- சீர்திருத்தத் திருச்சபை டென்மார்க், நோர்வே நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டது.
- இலங்கையின் முதலாவது ஆயர் ஜொவோ மொன்டெய்ரோ கொழும்பில் இறந்தார்.[1]
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- மே 19 - ஆன் பொலின், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி (பி. 1501/1507)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads