2004 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia

2004 இந்தியப் பொதுத் தேர்தல்
Remove ads

இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினான்காவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.

விரைவான உண்மைகள் மக்களவைக்கான 543 தொகுதிகள், பதிவு செய்த வாக்காளர்கள் ...
Remove ads

பின்புலம்

  • இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர்.
  • முந்தைய 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வாஜ்பாயின் ஐந்தாண்டு பதவிக்காலம் முழுவதும் முடிவடைந்ததையடுத்து.
  • இந்திய அரசியல் வரலாற்றிலே ஐந்தாண்டுகள் நீடித்த முதல் காங்கிரசு அல்லாத அரசு இதுவேயாகும்.
  • இந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு “இந்தியா ஒளிர்கிறது” என்ற பிரச்சாரத்தை இத்தேர்தலில் பாஜக மேற்கொண்டது.
  • ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வென்றது.
  • இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வலுவான மாநிலக் கட்சிகளின் கூட்டணியும் நகர மக்களிடம் மட்டுமே செல்லுபடியான “இந்தியா ஒளிர்கிறது” பிரச்சாரமும் பாஜகவின் தோல்விக்குக் காரணங்களாக சொல்லப்பட்டன.
  • காங்கிரஸ் கட்சி இம்முறை வெற்றி பெற்றாலும் தொங்கு நாடாளுமன்றமாகவே அமைந்தபோதிலும் தேர்தலுக்குப் பிறகு மேலும் சில மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஆதரவளித்ததால் காங்கிரஸ் தலைமையில் “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி” உருவாக்கியது.
  • இதற்கு இடதுசாரி கட்சிகளின் 60 உறுப்பினர்களும் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முன் வந்தனர்.
  • ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி பிரதமராக பதவி வகிக்க முன் வந்த நிலையில் சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காதவர் என்று காரணம் சொல்லி அவரை பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்று அன்றைய இந்திய குடியரசு தலைவரான அப்துல் கலாமிடம் எதிர்கட்சியில் பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர்.
  • இதையடுத்து இந்திய உயர் நீதிமன்றம் சோனியா காந்தி பிறப்பால் இட்டாலியர் ரோமானிய பிரஜை என்றாலும் ராஜீவ் காந்தியை மணந்து கொண்டதால் அவரின் இரத்த உறவால் இந்திய பிரஜை என்று தீர்ப்பளித்து சோனியா காந்தி பிரதமராக நாடாளும் தகுதி உடையவர். என்று தீர்ப்பளித்தது என்றாலும் எதிர் கட்சியினரின் பலமான விமர்சனங்களை காரணம் காட்டி பெருந்தன்மையாக தனக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் ஆக்கினார்.
Remove ads

முடிவுகள்

கட்சிகள் வாரியாக முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் கட்சி, போட்டியிட்ட மாநிலங்கள் ...

மாநிலங்கள் வாரியாக

மேலதிகத் தகவல்கள் மாநிலம், கட்சி ...
Remove ads

தேர்தலுக்குப் பிந்தய கூட்டணிகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads