சரிதா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரிதா (Saritha) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். 141 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[1][2][3]
Remove ads
வரலாறு
சரிதா கே. பாலச்சந்தரால் 1978 இல் மரோ சரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 இல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பின்னர் கெ.பாலச்சந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப் படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத் தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது
சரிதா பாலச்சந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலச்சந்தர் இவரை நடிக்கச் செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பாலச்சந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப் பின்னர் 2005 இல் தமிழில் ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் மனநிலை பிறழ்ந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
Remove ads
தமிழ்த் திரைப்படங்கள்
Remove ads
விருதுகள்
சரிதா சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை 1979-80, 1982-83, 1988 ஆகிய ஆண்டுகளுக்காகப் பெற்றார்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads