1284
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1284 (MCCLXXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
ஆப்பிரிக்கா
ஆசியா
- எகிப்தின் மம்லுக் சுல்தான் அல் மன்சூர் கலாவுன் எருசலேமுடன் 10 ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
- நொகாய் கான் தலைமையில் மங்கோலிய தங்க நாடோடிக் கூட்டம் அங்கேரியை இரண்டாவது தடவையாகத் தாக்கியது.
- திரால்லெசு என்ற பைசாந்திய நகரம் துருக்கிய அமீரகம் மெந்தேசிடம் சரணடைந்தது. 20,000 பேர் அடிமைகளாயினர்.
ஐரோப்பா
- மார்ச் 3 – வேல்சில் ஆங்கிலச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2]
- சூன் 5 – நாபொலியின் இரண்டாம் சார்லசு மன்னர் அராகனின் மூன்றாம் பீட்டர் மன்னரின் தளபதியினால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
- ஆகத்து 5–6 – பீசா குடியரசு மெலோரியா சமரில் இத்தாலிய நகர அரசான செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது.
- செர்பியாவின் இளவரசர் அங்கேரி மன்னரின் உடன்பிறவா சகோதரியை மணமுடித்ததை அடுத்து, செர்பிய மன்னர் ஸ்டெஃபான் திராகுத்தீன் பெல்கிறேட், சிர்மியா ஆகிய நகரங்களை அங்கேரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
- நோர்வே செருமானியக் கப்பல் ஒன்றைக் கொள்ளையடித்ததை அடுத்து, செருமானிய இராச்சியம் நோர்வே மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது.[3]
- செருமானியின் ஆம்பர்கு நகரம் தீயினால் அழிந்தது.
வேறு
- கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் மிகப்பழைய கல்லூரி பீட்டர்ஹவுஸ் இங்கிலாந்தில் திறக்கப்பட்டது.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- குலசேகர சிங்கையாரியன், யாழ்ப்பாண மன்னர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads