1679
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1679 (MDCLXXIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 24 - இரண்டாம் சார்லசு அரசர் 18 ஆண்டுகளாக இயங்கிய இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[1]
- சனவரி 28 - சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மார்ச் 6-மே 27 - இங்கிலாந்தின் புதிய நாடாளுமன்றம் கூடியது.[1] இது சூலை 12 இல் கலைக்கப்பட்டது.
- சூன் 4 - 6.4 அளவுள்ள நிலநடுக்கம் ஆர்மீனியாவின் யெரெவான் பகுதியில் ஏற்பட்டது.
- அக்டோபர் 18 - கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் ரொபர்ட் நொக்சு அங்கிருந்து தப்பி மன்னார் அரிப்பு என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்.[2]
- நவம்பர் 27 - மாசச்சூசெட்ஸ் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 80 வீடுகள், அனைத்து சேமிப்புக் கிடங்குகள், மற்றும் பட்டறையில் இருந்த அனைத்துக் கப்பல்களுக் தீக்கிரையாகின.
- திபெத்து-லடாக்-முகலாயப் போர் ஆரம்பமானது. திபெத்து லடாக்கினுள் ஊடுருவியது.
- நயாகரா அருவி கண்டுபிடிக்கப்பட்டது.
- முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஜிஸ்யா வர்யை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
- தமிழ் போர்த்துக்கீசிய அகராதி அன்டேம் டி புரவென்சா என்பவரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
- அழுத்த அனற்கலம் கண்டுபிடிக்கப்பட்டது.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- டிசம்பர் 4 - தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads