நாட்டுக்கோட்டை நகரத்தார்

From Wikipedia, the free encyclopedia

நாட்டுக்கோட்டை நகரத்தார்
Remove ads

நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார் என்று அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில் முற்பட்ட சாதியினர் பிரிவில் உள்ளனர்.[1] இவர்கள் நகரத்தார் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்றனர். மேலும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் செட்டிநாடு பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வணிகம் மற்றும் பெரும் நில உடைமையாளர்களாகவே திகழ்ந்துவருகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் காரைக்குடி (சிவகங்கை) மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சுற்றியுள்ள 76 ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகச் சமுதாயத்தினரான இவர்கள் வாழும் இந்தப் பகுதி செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் தனவைசியர், நாட்டுக்கோட்டை நகரத்தார், நாட்டுக்கோட்டை செட்டியார், குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது சைவ சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்துக் கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் திருமணங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவர்கள் சமையலில் தங்களுக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர்கள். நகரத்தார்களின் வீடுகள் மிகப் பிரம்மாண்டமானவை, இவ்வீீீடுகள் செட்டிநாட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகிறது

Remove ads

வரலாறு

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இம்மக்களின் பூர்வீகம் ஆகும். திசையாயிரத்து ஐநூற்றுவர், நானாதேசிகள் எனப்பல்வேறு வணிகக்குழுவின் பெயரால் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறார்கள் பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் 96 ஊர்கள் 76 ஊராக மாறியது பாண்டிய மன்னனால் 9 சிவன் கோயில்கள் நகரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது.

செட்டிநாடு என்று சொல் வழக்கில் இந்த 76 கிராமங்கள் அமைந்த பகுதி தனித்த கட்டிடக் கலையையும், பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் ஆலைத்தொழில், மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான பெரும் வணிகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள்.

Remove ads

உறவுமுறைப் பெயர்கள்

ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும், மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப் பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள் என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.

பார்க்க முதன்மைக் கட்டுரை: நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்

Remove ads

தொழில்துறை வளர்ச்சி

1950ல் தமிழ்நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய நிறுவனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப்பயிற்சியாகும்.

ஒன்பது நகரக் கோயில்கள்

  1. இளையாற்றங்குடி கோயில்
  2. மாத்தூர் கோயில்
  3. வைரவன் கோயில்
  4. இரணிகோயில்
  5. பிள்ளையார்பட்டி[2]
  6. நேமங்கோயில்
  7. இலுப்பைக்குடி
  8. சூரக்குடி
  9. வேலங்குடி[3]

இந்த ஒன்பது கோயில்களும் நகரக் கோயில் என்று அழைக்கப்படும். இவை பாண்டியனால் நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய அளவில் சுட்டசெங்கலால் ஆன கோயிலாக இருந்து வந்துள்ளது. பின்னர் நகரத்தாரால் பெரிய கற்றளி கோயிலாக கட்டப்பட்டுள்ளது.

ஒரு கோயிலை சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. அவை, இளையாற்றங்குடி கோயில் : ஒக்கூருடையார், பட்டணசாமியார், பெருமருதூருடையார், கழனி வாசல்குடியார், கிங்கிணிக்கூருடையார், பேரசெந்தூருடையர், சிறுசெந்தூருடையர். மாத்துர் கோயில் : உறையூர், அரும்பாக்கூர், கண்ணூர், கருப்பூர், குளத்தூர், மண்ணூர், மணலூர். வைரவன் கோயில்: பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு.

Remove ads

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய ஊர்கள்

Thumb
செட்டி நாடு அரண்மனை, காரைக்குடி

நாட்டுக்கோட்டை நகரத்தார் வாழும் 76 ஊர்கள்(ஒரு காலத்தில் 96 ஊராக இருந்தது) பின்வருமாறு.

1. அமராவதிபுதூர்

2. அரண்மனை சிறுவயல்

3. அரிமழம்

4. அரியக்குடி

5. அலவாக்கோட்டை

6. ஆ.தெக்கூர்

7. ஆ.முத்துப்பட்டணம்

8. ஆத்தங்குடி

9. ஆவினிப்பட்டி

10. ஆறாவயல்(சண்முகநாதபுரம்)

11. இராங்கியம்

12. உ. சிறுவயல்

13. உலகம்பட்டி

14. ஒக்கூர்

15. க.சொக்கனாதபுரம்

16. கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம்

17. கண்டரமாணிக்கம்

18. கண்டவராயன்பட்டி

19. கண்டனூர்

20. கருங்குளம்

21. கல்லல்

22. கல்லுப்பட்டி

23. காரைக்குடி

24. காளையார்மங்கலம்

25. கானாடுகாத்தான்

26. கீழச்சிவல்பட்டி

27. கீழப்பூங்குடி

28. குருவிக்கொண்டான்பட்டி

29. குழிபிறை

30. கொத்தமங்கலம்

31. கொத்தமங்கலம் லட்சுமிபுரம்

32. கொப்பனாபட்டி

33. கொல்லங்குடி. அழகாபுரி

34. கோட்டையூர்

35. கோட்டையூர். அழகாபுரி

36. கோனாபட்டு

37. சக்கந்தி

38. சிறாவயல்

39. சிறுகூடற்பட்டி

40. செம்மபனூர்

41. செவ்வூர்

42. சொக்கலிங்கம்புதூர்

43. சோழபுரம்

44. தாணிச்சாவூரணி(சொர்ணநாதபுரம்)

45. தேவகோட்டை

46. தேனிப்பட்டி

47. நடராஜபுரம்

48. நற்சாந்துபட்டி

49. நாச்சியாபுரம்

50. நாட்டரசன்கோட்டை

51. நெற்குப்பை

52. நேமத்தான்பட்டி

53. பட்டமங்கலம்

54. பலவான்குடி

55. பள்ளத்தூர்

56. பனங்குடி

57. பனையப்பட்டி

58. பாகனேரி

59. பில்லமங்களம். அளகாபுரி

60. பிள்ளையார்பட்டி

61. புதுவயல்

62. பூலாங்குறிச்சி

63. பொன்புதுப்பட்டி

64. மகிபாலன்பட்டி

65. மதகுப்பட்டி

66. மானகிரி

67. மிதிலைப்பட்டி

68. மேலச் சிவபுரி

69. ராயவரம்

70. வலையபட்டி

71. வி. லட்சுமிபுரம்

72. விராமதி

73. விரையாச்சிலை

74. வெற்றியூர்

75. வேகுப்பட்டி

76. வேந்தன்பட்டி

Remove ads

நகரத்தார் சத்திரங்கள்

வட இந்தியாவில்

Thumb
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம்

குறிப்பிடத்தகுந்த நகரத்தார்கள்

அரசியல் பங்களிப்பாளர்கள்

கல்வியாளர்கள்

சட்டத் துறையினர்

  • நீதியரசர் அரு. இலட்சுமணன், தலைவர், இந்திய சட்ட கமிஷன்; இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.
  • நீதியரசர் மெ. சொக்கலிங்கம், மெட்ராஸ் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி.

விளையாட்டுத் துறை

  • மு. அ. சிதம்பரம் செட்டியார், தொழிலதிபர், முன்னாள் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (சென்னையின் சேப்பாக்கம் கிரிக்கெட் ஆடுகளம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.)

திரைப்படத் துறையினர்

ஊடகத் துறையினர்

  • சத்தி வை.கோவிந்தன், சத்தி காரியாலயம். தமிழ் பதிப்புலக தந்தை என போற்றக்கூடியவர்.
  • ‘பாப்பா’ இராம.தியாகராஜன், குழந்தைகள் இதழ்களின் தந்தை என்று அறியப்பட்டவர். ‘பாப்பா’ ‘கதையோ கதை’ ஆகிய குழந்தைகள் வார, மாத இதழ்களையும் ‘திரை ஒலி’ என்ற திரைப்பட மாத இதழையும் இராயவரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் வெளியிட்டவர். ‘திரை ஒலி’ யில் கவிஞர் கண்ணதாசன் பணி புரிந்து திரை உலகுக்கு அறிமுகமானார்.
  • தமிழ்வாணன், எழுத்தாளர், கல்கண்டு பொறுப்பாசிரியர்
  • கண முத்தையா, தமிழ் பதிப்பகத் துறை முன்னோடி
  • சின்ன அண்ணாமலை ,தமிழ் புத்தகாலயம்.
  • எஸ். ஏ. பி. அண்ணாமலை, நிறுவனர், குமுதம் வார இதழ்.
  • லேனா தமிழ்வாணன், இணை ஆசிரியர், கல்கண்டு இதழ்.

விடுதலைப் போராட்ட வீரர்கள்

பிற துறையினர்

Remove ads

செட்டிநாட்டு நகைகள்

Thumb
கழுத்திரு (நகரத்தார் தாலி)<nowiki>

அஞ்சல் தலைகள்

  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார், 1980
  • ராஜா சர் முத்தையா செட்டியார், 1987
  • அ.மு.மு.முருகப்ப செட்டியார், 2005
  • ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார், 2006
  • வள்ளல் அழகப்ப செட்டியார், 2007
  • கவியரசர் கண்ணதாசன், 2013
  • மு. வெ. அருணாச்சலம் செட்டியார்

இவற்றையும் காண்க

மேலும் வாசிக்க

  • Rajeswary Brown. (1993). Chettiar capital and Southeast Asian credit networks in the inter-war period. In G. Austin and K. Sugihara, eds. Local Suppliers of Credit in the Third World, 1750-1960. New York: St. Martin's Press.
  • David Rudner. (1989). "Banker's Trust and the culture of banking among the Nattukottai Chettiars of colonial South India". Modern Asian Studies 23(3), 417-458.
  • David West Rudner. (1994). "Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars". University of California Press.
  • Heiko Schrader. (1996). "Chettiar finance in Colonial Asia". Zeitschrift fur Ethnologie 121, 101-126.
  • Nishimura, Yuko Gender. (1998). Kinship and Property Rights: Nagarathar Womanhood in South India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564273-2.
  • பழ.கைலாஷ் (2022). "காசி விசாலாட்சி கோயில் தமிழ்க் கல்வெட்டுகள்". தமிழக தொல்லியல் கழகம் ஆவணம் இதழ் 33: பக் 89.
  • பழ.கைலாஷ் (2022 நவம்பர் 16). "தமிழ் அண்ணை விசாலாட்சி". ஒரேநாடு இதழ் : பக் 23.
Remove ads

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads