இந்தியாவில்கொரோனாவைரசு தொற்று, 30 சனவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 27 செப்டம்பர், 2020 நிலவரப்படி 59,03,932 இதற்கு அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 48,49,584 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 93,379 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.[8] 14 மார்ச் 2020, அன்று கொரோனா வைரஸ் தொற்றை இந்திய அரசு, தேசிய பேரிடராக அறிவித்தது. 26 செப்டம்பர், 2020 நிலவரப்படி, இந்தியாவில் 7,12,57,836 மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் இந்தியாவில், உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் வரைபடம் ...
டெல்லி,[9]அரியானா,[10]கருநாடகா,[11]மகாராஷ்டிரா,[12]குசராத்து[13] மற்றும் உத்தரப்பிரதேசத்தில்,[14] ஆகிய மாநிலங்களில் இந்த தொற்றுநோய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்கள் பெரும்பாலானவை மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு தொடர்புடையவை என்பதால், இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தியுள்ளது.
22 மார்ச் 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோதியின் வேண்டுகோளின் பேரில் இந்தியா 14 மணி நேர தன்னார்வ பொது ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தது. வைரசால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களிலும், அனைத்து முக்கிய நகரங்களிலும் ஊரடங்கு அரசாங்கம் அமல்படுத்தியது.[15] மேலும், மார்ச் 24 அன்று, பிரதமர் 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை உத்தரவிட்டார், இது இந்தியாவின் மொத்த 130 கோடி மக்களையும் பாதித்தது.[16]
30 சனவரி 2020: ஊகான் பல்கலைக்கழகத்தில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒரு மாணவருக்கு நாட்டின் முதல் கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிப்ரவரி
2 பிப்ரவரி 2020: அன்று இரண்டாவது நபருக்கு கேரளாவில் உறுதி செய்யப்பட்டது, இவர் சீனாவிற்கு தொடர் பயணம் செய்தவர்.
3 பிப்ரவரி 2020: அன்று மூன்றாவது நபருக்கு கேரளாவின், காசர்கோடு பகுதியில் உறுதி செய்யப்பட்டது, இவர் ஊகான், சீனா போன்ற இடங்களுக்கு பயணம் செய்தவர். இந்த மூன்று பேரும் உடல் நலம் சரியானது.[18]
கொரோனாவைரசை பற்றி தெரிவிக்க, நாட்டுமக்களிடம் இருமுறை பிரதமர் நரேந்திர மோதி ஊடக வாயிலாக நேரலையில் உரையாற்றினார்.
19 மார்ச் 2020 அன்று ஆற்றிய உரை:
கொரோனாவைரசை பொதுமக்கள் விழிப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மார்ச் 22 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள்யாரும் ஞாயிறு அன்று வெளியே வர வேண்டாம், 22 ஆம் தேதி கொரோனா வைரசுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்றவர்களுக்கு மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிரூபிப்போம்.
வேலை இல்லாததால், ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. அச்சத்தினால் அத்தியாவசியப் பொருட்களை யாரும் வாங்கிக் குவிக்க வேண்டாம். பொருளாதார மந்தநிலையை போக்குவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு ஆகும். ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் பத்து சக குடிமக்களிடம் ஊரடங்கு என்றால் என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். வேலையில்லாத நாள்களில் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை பிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
24 மார்ச் 2020 அன்று ஆற்றிய உரை:
உலகநாடுகள் கொரோனாவைரசு தாக்குதலால் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எப்படி சிறப்பான முறைகளைக் கையாண்டாலும் இந்த வைரஸ் மிகவும் மோசமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வை வைத்து பார்க்கையில் Social Distancing மட்டுமே இந்த வைரஸை ஒழிப்பதற்கு மிகச்சிறந்த வழியாகப் பார்க்கப்படுகிறது. இந்த வைரசு தாக்குதலை சமாளிக்க இந்த முறையை நாம் மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
சிலர் இதை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருகிறார்கள். ஆனால், கள நிலவரம் அப்படியில்லை. ஒவ்வொரு குடிமகனும், தந்தை, தாய், மகன், நண்பன் என அனைவரும் இதை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஏன் இந்த நாட்டின் பிரதம மந்திரியாக நானுமே கடைபிடித்தாக வேண்டும். இதை கடைபிடிக்கத் தவறினால், இதுபோன்ற மோசமான நடவடிக்கைகள் தொடர்ந்தால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும். இன்று இரவு 12 மணி முதல் இந்த தேசம் முழுமையான தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு இது அமலில் இருக்கும். இது பல்வேறு வல்லுநர்களின் திட்டங்களில் இருந்து எடுத்தாளப்பட்டு இருக்கும் முடிவு. 21 தினங்களில் இந்த நாடும், மக்களின் வீடும் பழைய நிலைக்குத் திரும்பும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. அப்படி இல்லையென்றால், பல குடும்பங்கள் இழப்பை சந்திக்கும் என்பதை நினைவுப்படுத்துகிறேன். தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
03 ஏப்ரல் 2020 அன்று ஆற்றிய உரை: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து செல்போன் டார்ச், அகல்விளக்கு போன்றவற்றை ஒளிரச் செய்து நம்முடைய ஒற்றுமையைக் காட்டுங்கள்’ என்று கூறினார். அதன்படி நாட்டுமக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர் மற்றும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.[19]
14 ஏப்ரல் 2020 அன்று ஆற்றிய உரை:இன்றிலிருந்து மே 03 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.[20]
மார்ச் 22 ஆம் தேதி, 22 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 82 மாவட்டங்களை முற்றிலுமாக, ஊரடங்கு செய்வதற்கு இந்திய அரசு முடிவு செய்தது. அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் மட்டுமே தொடர வேண்டும். டெல்லி, பெங்களூரு, சென்னை, மும்பை, சண்டிகர் மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்கள் உட்பட 80 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மாநிலங்களுக்கு இடையிலான இயக்கங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும் சில மாநிலங்கள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன.
மார்ச் 23 அன்று, தொற்றுகள் பதிவாகிய 75 மாவட்டங்களை ஊரடங்கு அமல்படுத்துவதாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன.
24 மார்ச் 2020 நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
ஊரடங்கு காலத்தின் முடிவு நெருங்கியவுடன், பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்தன. ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள் ஏப்ரல் 30 வரை, மாநில ஊரடங்குகளை நீட்டித்துள்ளன.
ஏப்ரல் 14 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கை, மே 3 வரை நீட்டித்தார்.
ஏப்ரல் 29 அன்று, பஞ்சாப் மாநில அரசு ஊரடங்கு உத்தரவை மே 17 வரை நீட்டிப்பதாக அறிவித்தது.
மே 1 அன்று, இந்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை, மே 17 வரை இரண்டு வாரங்கள் நீட்டித்தது.
மே 5 ஆம் தேதி, தெலுங்கானா அரசு தங்கள் மாநிலத்தில் மே 29 வரை ஊரடங்கு, நீட்டிப்பதாக அறிவித்தது.
மே 17 அன்று, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) மற்றும் உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) சில தளர்வுகளுடன் மே 18-க்கு பிறகு, மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்தது.[21][22][23]
மே 30 அன்று, 5 ஆம் கட்டமாக சூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் சூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் சூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவித்தது.[24]
இந்தியாவில் பல வழிகளில் கொரானா வைரஸ் பரவியது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் மூலம் பரவியது என கொரனா வைரஸ் நோய் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தினர் தெற்கு தில்லியில் உள்ள நிஜாமுதீன் எனும் மசூதியிலும், மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 13 மார்ச் 2020 முதல் 15 மார்ச் 2020 முடிய ஆயிரக்கணக்கான தப்லீக் ஜமாஅத்தினர்கள் ஒன்றாகக் கூடி சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.[25] இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இசுலாமிய மதகுருக்களும் அடங்குவர். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து 1,500 கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.[26][27][28][29]
கொரானா வைரஸ் தொற்று பாதித்த தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தாக்கிய வழக்கில், தப்லி ஜமாத் உறுப்பினர்களில் 6 பேர் மீது உத்தரப் பிரதேச அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தது.[30]
தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தங்களுடன் வெளிநாட்டு மதகுருமார்களையும் தங்கள் மாநிலத்தின் பல நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டினர், தங்களுடன் தாய்லாந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை தப்லீக் பிரசாரத்திற்கு ஈரோடு, மதுரை, சேலம் போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட தாய்லாந்து நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, ஈரோடு மற்றும் சேலம் திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஈரோட்டில் மார்ச் 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டன.
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 26 ஆகத்து 2024[35]
குறிப்புகள்
The MoHFW data has included a case from திமாப்பூர் மாவட்டம் of நாகாலாந்து, a northeastern state of India, against the case count of அசாம். It has been included since the patient was shifted in GMCH, Assam for treatment.[31] Here in the table the case figure is included against Assam as per MoHFW and not per the அசாம்'s statistics.[32]
The MoHFW data has included a death from மாகே மாவட்டம் of Puducherry, a union territory of India and which is surrounded by வடக்கு மலபார் region of கேரளம், against the death count of Kerala. It has been included since the patient died at Parayaram Medical College in கண்ணூர், Kerala.[33] Here in the table the death figure is included against Kerala as per MoHFW and not per the கேரள அரசு’s statistics.[34]
மூடு
கொரோனா வைரசு தொற்றை இந்திய அரசு, தேசிய பேரிடராக அறிவித்தது.
கொரோனா வைரசு பாதிப்பால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
ஏப்ரல் 3 ஆம் தேதி தில்லியில் உள்ள சனாதிபதி மாளிகையில் நடைபெறவிருந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மகாராட்டிராவின், நாக்பூர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உள்ளதா என்று சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து நபர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பியதாக ஏ. என். ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டது.
இராஜஸ்தான், மேற்கு வங்கம் மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பால் அனைத்து கல்விக் கூடங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மார்ச் 30 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் கொரோனா வைரசு காரணமாக மூடப்பட்டது.
மார்ச் 31 ஆம் தேதி வரை, தில்லியில் உள்ள இரவுவிடுதிகள், உடற்பயிற்சிகூடங்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவை அனைத்தும் மூடப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூடப்படும் என முதலமைச்சர் க. சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
கருநாடகாவில் வணிக வளாகங்கள், இரவு விடுதிகள், திரையரங்குகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், கண்காட்சிகள், திருமணங்கள், மாநாடுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.
29 ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் துடுப்பாட்ட தொடரானது, ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற இருந்த ஒருநாள் துடுப்பாட்ட போட்டி ரத்து செய்யப்பட்டன.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.[36]
கொடைக்கானலில் இருந்து 21 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். செருமன், இசுரேல் நாடுகளைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
தமிழகத்தில் மார்ச் 31 வரை ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூட சென்னை மாநகராட்சி அறிவுரை வழங்கியது. சென்னை மாநகராட்சி பூங்காக்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சென்னை ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டங்களை தவிர்க்க, நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டது.[37]
உத்தராகண்டம் மாநிலத்துக்குள் வெளிநாட்டினர் நுழைய தடை பிறப்பிக்கப்பட்டது.
நீலகிரியில் மார்ச் 31 ஆம் தேதி வரை தேவாலயங்கள் மூடப்படும் என அறிவிப்பு.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்தி வைக்க நடுவண் அரசு உத்தரவிட்டது.
இராஜஸ்தானில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது, 4 பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டது.
தில்லியில் கொரோனாவைரசு அறிகுறி நோயாளி மருத்துவமனையின் 7வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவையிலிருந்துகருநாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டது.
மார்ச் 20, 2020 முதல் நாடு முழுக்க 168 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் கூட்டம் குறைந்ததால், இரயில்வே துறை நடவடிக்கை.
நாட்டின் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒத்திவைக்க நடுவண் அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் பல தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
மார்ச் 22 முதல் வெளிநாட்டு வானூர்திகள் இந்தியா வர தடை விதிப்பு.
தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை வார சந்தைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு.
தமிழகம் முழுவதும் பெரிய நகைக் கடைகள், ஜவுளி கடைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் பெரிய பல்பொருள் அங்காடிகளையும் மூட உத்தரவிட்டது.
மார்ச் 22 ஆம் தேதி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்தார்.[38]
பிரதமர் மோதியின் அழைப்பை ஏற்று மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்தார்.
வெளிமாநில வாகனங்கள் தமிழகத்தில் நுழைவதற்கு தடை செய்யப்பட்டது.
கேரளா, கருநாடகா, ஆந்திரா எல்லைகள் மார்ச் 21 முதல் மார்ச் 31 வரை மூடப்படுவதாகவும், தமிழகத்தில் மார்ச் 22 அன்று அரசுப் பேருந்துகள் ஓடாது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஒடிசாவில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு முழுமையாக மூடப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாய்க் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு என முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு. அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரையிலும் பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ தொடருந்து சேவைகள் மார்ச் 22 முதல் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
மார்ச் 22 அன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் மார்ச் 24, மாலை 6 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு மற்றும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
25 மார்ச், 2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு லாக்டவுன் அமல் என நடுவண் அரசு உத்தரவு, நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியேவரவே கூடாது என பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்தார்.
மணிப்பூரில் மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு.
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ 2,000 வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
24 மார்ச் 2020 நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.[39]
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு.
புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ 2,000 வழங்கப்படும் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ 1,000 வழங்கப்படும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
மளிகை கடைகளுக்கு நடந்தே சென்று பொருள் வாங்க வேண்டும்- சென்னை காவல் ஆணையர் உத்தரவு.
கொரோனா வைரசு பரவலால், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் விழா ரத்து. சித்ரா பவுர்ணமி நாளில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறும். ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி மே 6 வரை திருவிழா நடைபெறும், இத்திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடுவார்கள். கொரோனா வைரசு அச்சத்தினால் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களை மே 15 ஆம் தேதி வரை திறக்க வேண்டாம் என மத்திய அரசு பரிந்துரை. பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முடிவு. வழிபாட்டுத் தலங்கள், வணிகவளாகங்கள் திறப்பதற்கான கட்டுப்பாட்டை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க ஆலோசனை. சூன் மாத இறுதியில் பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரை.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நடுவண் அரசு வரும் 11 ஆம் தேதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல். வரும் 11 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஒடிசாவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக, முதல்வர் நவீன்பட்நாயக் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடுகள், கொரோனா வதந்திகளை தடுக்க நடவடிக்கை. அதிகமுறை பார்வேர்ட் செய்த, தகவல்களை ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்.
ஏப்ரல் 14 முதல் மே 03 வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில தளர்வுகள் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
மே 03 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
சூன் 08 அன்று, தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.[40]
சூன் 09 அன்று, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11 ஆம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி, அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்தார்.[41][42]
சூன் 09 அன்று, புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி, அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.[43]
தமிழகத்தில் செப்டம்பர் 26, 2020 நிலவரப்படி, இதற்கு அதிகமானோர் நோயால் 5,75,017 பேர் பாதிக்கப்பட்டு, 9,233 பேர் உயிரிழந்துள்ளார் என்றும் அதில் 5,19,448 பேர் மீண்டு வந்துள்ளார் என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் மாநாடுகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்துவதற்கும் மார்ச் 31 வரை அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்கன்வாடி மையங்களும் மார்ச் 31 வரை மூடப்பட்டாலும் 15 நாட்களுக்கான உணவுப் பொருட்கள் அந்த குழந்தைகளின் குடும்பத்தாரிடம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில எல்லைகள் மற்றும் மாவட்டங்களின் எல்லைகளையும் மூடவும் மற்றும் சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தவும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊடாடும் வரைபடங்கள்
இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 இறப்புகளின், ஊடாடும் வரைபடம்.
இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றுகளின், ஊடாடும் வரைபடம்.
உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகள், சிகிச்சை பெற்று வருவோர், உடல்நலம் தேறியவர்கள் மற்றும் இறப்புகள்
உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகள்சிகிச்சை பெற்று வருவோர்உடல்நலம் தேறியவர்கள்இறப்புகள்