காங்கேயம்

இது தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia

Remove ads

காங்கேயம் (ஆங்கிலம்:Kangeyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில உள்ள காங்கேயம் வட்டம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இவ்வூரைச் சேர்ந்த காளைகள் புகழ்பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் எனப்படுகின்றன. காங்கேயம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads
Remove ads

காங்கேயம் காளை

காங்கேயம் காளை காங்கேயத்தை பூர்விகமாகக் கொண்ட நாட்டு மாட்டு இனமாகும். இவை கடும் வறட்சி காலங்களிலும் தன்னை தகவமைத்து வலிமையோடு வாழும் சிறப்பு கொண்டது. இவை குறுகிய, தடித்த, வலுவான கால்களும், குறுகிய கழுத்தும், உறுதியான கொம்பும் சிறிய உடல் ஆகியவற்றைக் கொண்ட காளைகள் ஆகும். மேலும் இவை பொதுவாக சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,449 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 32,147ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.1%மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2811 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,000 மற்றும் 23 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.86% , இசுலாமியர்கள் 6.22% , கிறித்தவர்கள் 3.91% மற்றும் பிறர் 1.01% ஆகவுள்ளனர்.[4]

Remove ads

போக்குவரத்து

காங்கேயம் நகராட்சி போக்குவரத்தை பொறுத்தவரை முக்கிய பங்காற்றுகிறது. காங்கேயத்தில் இருந்து கோயம்புத்தூர், தாராபுரம்,சென்னை, மயிலாடுதுறை, காரைக்குடி, பள்ளப்பட்டி, கொடுமுடி, திருச்செங்கோடு, ஊட்டி, பல்லடம், சூலூர், பொங்கலூர், திருப்பூர், பழநி, முத்தூர், வெள்ளக்கோயில், கரூர், திருச்சி, குளித்தலை, வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஈரோடு, சென்னிமலை, பொள்ளாச்சி, அரச்சலூர், அரியலூர், மணப்பாறை, பெருந்துறை, கோபி, எடப்பாடி, ஓசூர், பெங்களூர், மதுரை, திருச்செந்தூர், நாகபட்டினம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு பேருந்துப் போக்குவரத்து சேவை உள்ளது.

தொழில் மற்றும் பொருளாதாரம்

காங்கேயத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் அரிசி உற்பத்தி ஆலைகள், தேங்காய் கொப்பரை உற்பத்தி (தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உலர் கொப்பரை),தேங்காய் எண்ணெய் உற்பத்தி, நெய் உற்பத்தி மற்றும் கார்பன் தயாரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.தமிழகத்தில் தஞ்சாவூர், காவிரி டெல்டா பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் கொள்முதல் செய்யப்படும் நெல், பதப்படுத்துவதற்காக மற்றும் அரிசி தயாரிக்க காங்கேயத்துக்கு கொண்டு வரப்படுகிறது. தாலுகாவில் 500க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன.

காங்கேயத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி 1980 களில் தொடங்கியது, தமிழ்நாட்டின் விவசாயிகள் முதன்முதலில் தேங்காய்களை வணிக ரீதியாக பயிரிடத் தொடங்கினர். இப்போதெல்லாம், காங்கேயம் இந்தியாவின் முக்கிய தேங்காய் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் ஒன்றாகும்; இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கேயம் தேங்காய் எண்ணெய் சர்வதேச அளவிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.எண்ணெய் உற்பத்தியில், தேங்காய் கொப்பரை முதலில் இதற்காக உருவாக்கப்பட்ட பெரிய களங்களில் உலர்த்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்வதற்காக அவை எண்ணெய் ஆலைகளில் பதப்படுத்தப்படுகின்றன.காங்கேயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 150 தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் காங்கேயம் தாலுகாவில் சுமார் 500 கொப்பரை பதப்படுத்துதல் மற்றும் உலர்த்தும் களங்கள் உள்ளன. காங்கேயம் பெரிய அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலைகள் உள்ள காரணமாக "அரிசி மற்றும் எண்ணெய் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. காங்கேயத்தில் நெய் மற்றும் அலங்கார கல் உற்பத்தியும் முக்கிய வணிகமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படும் கல் "மூன் ஸ்டோன்" என்று அறியப்படுகிறது மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் கார்பன் உற்பத்தியில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று காங்கயம். இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்பன் உள்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காங்கேயம், வாகன உற்கட்டமைப்புக்கு (கன்டெய்னர் மற்றும் திறந்த வகை) புகழ்பெற்ற நகரமாகும்.

கம்பிகள் உற்பத்தி செய்யும் சில நிறுவனங்களும் நகரத்திற்குள் அமைந்துள்ளன.

காங்கேயத்தில் பல நூற்பு ஆலைகள் மற்றும் பின்னலாடை துணி உற்பத்தி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

அதேபோல் paper அட்டை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்களும் நகரத்தை சுற்றி அமைத்துள்ளன

Remove ads

பயன்பாடுகள்

கங்கேயத்தில் 54 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் காங்கயம் சுகாதாரத் தொகுதியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன, இது திருப்பூர் சுகாதார பிரிவு மாவட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இவை தவிர, நகரத்தில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காங்கேயத்திலும் அதைச் சுற்றியும் அமைந்துள்ளன.

காங்கேயம் அரசு மருத்துவமனை தற்பொழுது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன .

காங்கேயத்தில் திங்கள் கிழமையில் வாரச் சந்தை கூடுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads