2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2012 Summer Olympics), அலுவல் முறையில் 30வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXX Olympiad) அல்லது இலண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற்றது. தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டை மூன்றாவது முறையாக நடத்தும் பெருமையை இலண்டன் மாநகரம் பெற்றிருக்கின்றது.[1][2]. 1908 மற்றும் 1948 ஆண்டுகளில் இருமுறை இங்கு இவ்விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன.[3][4]
1944 ஆண்டு இங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி இரண்டாவது உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நாடுகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை (1904, 1932, 1984, 1996) ஒலிம்பிக் நடத்திய அமெரிக்கா உள்ளது. ஜெர்மனி (1936, 1972), ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), கிரேக்கம் (1896, 2004) ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தி உள்ளன.
இதுவரை லண்டன் (இங்கிலாந்து), லாஸ் ஏஞ்சலஸ் (ஐக்கிய அமெரிக்கா), பாரிசு (பிரான்ஸ்), ஏதென்ஸ் (கிரேக்கம்) ஆகிய நகரங்கள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளன. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நகரம் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. ஆனால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு பின் லண்டன் நகரம் முதலிடத்தை தனித்துப் பிடித்துள்ளது.
சூலை 6, 2005இல் சிங்கப்பூரில் நடைபெற்ற 117வது கூட்டத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் நான்கு சுற்று வாக்களிப்புக்குப் பின் இலண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2012 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு மாஸ்கோ, நியூயார்க் நகரம், மாட்ரிட் மற்றும் பாரிசு ஆகிய நகரங்களும் விண்ணப்பித்திருந்தன.[5] வெற்றிபெற்ற ஏலத்திற்கு முன்னாள் ஒலிம்பிக் சாதனையாளர் செபாஸ்டியன் லார்டு கோ தலைமையேற்றிருந்தார்.
இந்த விளையாட்டுக்களுக்கான நிதிநிலை பரிசீலனைகள் மிகுந்த சர்ச்சைக்கு இடமளித்தன[6][7] எனினும் இலண்டனின் பல்வேறு பகுதிகள் பேண்தகு வளர்ச்சி நோக்கத்துடன் மேம்படுத்தப்படுவதால்[8] வரவேற்பும் இருந்தன. விளையாட்டுக்களின் முகனையான குவியமாக புதியதாக கட்டமைக்கப்பட்ட ஒலிம்பிக் பூங்கா உள்ளது. இது கிழக்கு இலண்டனில் ஸ்ட்ராஃபோர்டில் முன்பு தொழிற்பேட்டையாக விளங்கிய 200 எக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[9] ஏலத்திற்கு முன்பே இருந்த விளையாட்டரங்கங்களை ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட்டது.
Remove ads
ஏற்று நடத்த ஏலம்

2012 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு ஏலப் புள்ளிகள் அளித்திட இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்த சூலை 15 2003 அன்று ஒன்பது நகரங்கள் பங்கெடுத்திருந்தன. அவை: அவானா, இசுத்தான்புல், லைப்சிக், இலண்டன், மாட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க், பாரிசு, மற்றும் ரியோ டி ஜெனிரோ.
மே 18 2004 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) இவற்றிலிருந்து தேர்வுக்கான நகரங்களை ஐந்தாகக் குறைத்தது: இலண்டன், மாட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க் மற்றும் பாரிசு.
பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தணிக்கைக் குழு 2005ஆம் ஆண்டின் பெப்ரவரி-மார்ச்சு மாதங்களில் இந்த ஐந்து நகரங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர். இக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு சூன் 6 2005 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் எந்த தரவரிசையோ புள்ளிகளோ தரப்படாவிடினும் மதிப்பீடுகளின்படி பாரிசு முதல்நிலையிலும் இலண்டன் இரண்டாமிடத்திலும் இருந்தன.
இதன்படியும் அண்மைக் காலத்தில் இது பாரிசின் மூன்றாவது முயற்சி என்பதாலும் பாரிசே தேர்ந்தெடுக்கப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 2004இன் ஆகத்தில் இலண்டனுக்கும் பாரிசிற்கும் சமநிலை இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.[10]
சிங்கப்பூரில் சூலை 6 2005 அன்று ராஃபிள்சு நகர கருத்தரங்கு மையத்தில் வெற்றி பெற்ற நகரம் அறிவிக்கப்பட்டது. முதலாவதாக வெளியேறிய நகரம் மாஸ்கோவாகும். தொடர்ந்து நியூயார்க், மாட்ரிட் வெளியேறின. நான்காவது சுற்றின் இறுதியில் பாரிசுக்கு 50 வாக்குகளும் இலண்டனுக்கு 54 வாக்குகளும் கிடைத்து 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இலண்டன் உரிமை பெற்றது.[11] அறிவிக்கப்பட்ட 24 மணி நேரங்களுக்குள்ளேயே சூலை 7, 2005இல் இலண்டன் தொடர் வண்டிப் போக்குவரத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடையாக அமைந்தது.[12]
Remove ads
பங்குபற்றிய நாடுகள்
204 தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 இற்கும் அதிகமானோர் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டது.[13] 2010 ஆம் ஆண்டில் நெதர்லாந்து அண்டிலிசு கலைக்கப்பட்டதை அடுத்து 2011 சூன் மாதத்தில் இடம்பெற்ற பன்னாட்டு குழுவின் 123வது மாநாட்டில் அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்புரிமை திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், இந்நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியுடன் 2012 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றனர். 2011 ஆம் ஆண்டில் உருவான தெற்கு சூடானுக்கு தேசிய ஒலிம்பிக் குழு இல்லாததால் அந்நாட்டின் ஒரேயொரு விளையாட்டு வீரர் குவோர் மாரியல் ஒலிம்பிக் கொடியுடன் போட்டிகளில் பங்கேற்றார்.[14]
Remove ads
போட்டிகள்
தட கள விளையாட்டுக்கள் (47)
நீர் விளையாட்டுக்கள் (46)
|
` சீருடற்பயிற்சிகள் (18)தற்காப்புக் கலைகள்
|
ஊர்தி ஓட்டங்கள்
குழு விளையாட்டுக்கள்
கருவி விளையாட்டுக்கள்
|
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads