முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

From Wikipedia, the free encyclopedia

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
Remove ads

மகேந்திரவர்மர் (பொ.ஊ. 600 முதல் 630 வரை) தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவார். இவரே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய சிம்மவிட்டுணுவின் மகனாவார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்தார். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைன்யம் தோற்கடிக்கப்பட்டது. இவர் பொ.ஊ. 630 வரை ஆட்சியிலிருந்தார் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டு எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை பொ.ஊ. 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.

மேலதிகத் தகவல்கள் பல்லவ சிம்ம கொடி, பல்லவ மன்னர்களின் பட்டியல் ...
Thumb
மகாபலிபுரத்தில் உள்ள குடைவறைக் கோவில்கள். மகேந்திரவர் ஆட்சிக்காலத்தில்தான் இவற்றின் கட்டுமானம் தொடங்கியதாக அறியப்படுகின்றது.

பட்டப்பெயர்கள்

மத்தவிலாசன்

சித்திரகார புலி

சங்கீரண கதி

சத்ருமல்லன்

அவனிபாஜன்

பரிவாதனி என்ற வீணை வாசிப்பில் சிறந்தவன்.

மகேந்திரவர்மர் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசரே. மகேந்திரவர்மர் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளார். மகேந்திரவர்மர்

குடைந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்தில் காணலாம்.

மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவர் இயற்றியுள்ளார். இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.

மகேந்திரவர்மர் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தார், பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார்னென்று அறிகின்றோம்.[1]

மகேந்திரவர்மரையடுத்து பல்லவ அரசர்களில் மிகப்புகழ்பெற்றவரும் மகேந்திரவர்மரின் மகனுமான நரசிம்மவர்மன் அரியணையேறினான்.

Remove ads

தகவல் ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads