1569
ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1569 (MDLXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 11–மே 6 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டுக் குலுக்கல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. பழைய புனித பவுல் பேராலயத்தில் இடம்பெற்றது. 10 சிலிங்குகள் பெறுமதியான இச்சீட்டுகளினால் கிடைக்கப்பெற்ற பணம் துறைமுகங்கள் மற்றும் பொது இடங்களை மேம்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.[1]
- சூலை 1 – போலந்து இராச்சியமும் லிதுவேனியாவும் ஒரு நாடாக போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என்ற பெயரில் இணைந்தன.
- நவம்பர்–டிசம்பர் – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை ஆட்சியில் இருந்து இறக்கி கத்தோலிக்கரான ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியை இங்கிலாந்தின் அரசியாக்க வடக்கின் மூன்று இளவரசர்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. மூவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
- அக்பர் பத்தேப்பூர் சிக்ரி என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரை அமைத்தார்.
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அரியநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது.
- அயூத்தியா அரசு பர்மாவிடம் தோற்றது.[2]:42–43
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- மே 10 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (பி. 1500)
- செப்டம்பர் 9 – பீட்டர் புரூகல், டச்சு ஓவியர் (பி. 1525)
- கெம்பெ கவுடா, குறுநில மன்னர், பெங்களூருவின் நிறுவனர் (பி. 1510)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads