1858
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1858 (MDCCCLVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - இலங்கையில் முதலாவது தொலைத்தந்தித் தொடர்பு கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- ஜனவரி 9 - டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
- ஜனவரி 14 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
- மார்ச் 30 - ஹைமன் லிப்மன் அழிப்பானுடன் சேர்ந்த எழுதுகோளுக்கான காப்புரிமம் பெற்றார்.
- ஜூன் 17 - ஜான்சிராணி வெள்ளையர்களுடன் போரிட்டு மடிந்தாள்.
- ஜூன் 20 - முதல் இந்திய விடுதலைப் போரின் கடைசி புரட்சியாளன் பிரித்தானியரிடம் குவாலியரில் பிடிபட்டான்.
- ஆகஸ்ட் 3 - இலங்கையில் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 17 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- அக்டோபர் - இலங்கையில் தொலைத்தந்தித் தொடர்பு கண்டிக்கும் மன்னாருக்கும் இடையில் மிகிந்தலை வழியாக ஏற்படுத்தப்பட்டது.
Remove ads
நாள் அறியப்படாதவை
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகாரங்களையும் சொத்துக்களையும் பிரித்தானிய அரசு கைப்பற்றியது.
- ஹென்றி கிரேயின் மனித உடற்கூறு இயல் ஆங்கிலப் பாடநூல் வெளியானது.
பிறப்புகள்
- ஏப்ரல் 18 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)
இறப்புகள்
- சூன் 17 - ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)
1858 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads