இந்தியாவின் தலைமை அமைச்சர் From Wikipedia, the free encyclopedia
நரேந்திர தாமோதர்தாசு மோதி (Narendra Damodardas Modi, பிறப்பு: 17 செப்டம்பர் 1950) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் 2014 மே 26 முதல் இந்தியாவின் பிரதமராக பணியாற்றுகிறார். இவர் 2001 முதல் 2014 வரை குசராத்து மாநில முதல்வராக இருந்தார். வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சி, மற்றும் வலதுசாரி இந்து தேசியவாத அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார். மோதி இந்திய தேசிய காங்கிரசுக்கு வெளியே நீண்ட காலம் பிரதமராக இருந்து வருகிறார்.
நரேந்திர மோதி Narendra Modi | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அதிகாரப்பூர்வ உருவப்படம், 2022 | |||||||||||||
14-ஆவது இந்தியப் பிரதமர் | |||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||
பதவியில் 26 மே 2014 | |||||||||||||
குடியரசுத் தலைவர் | |||||||||||||
துணைக் குடியரசுத் தலைவர் | |||||||||||||
முன்னையவர் | மன்மோகன் சிங் | ||||||||||||
| |||||||||||||
மக்களவைத் தலைவர் | |||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||
பதவியில் 26 மே 2014 | |||||||||||||
Deputy | |||||||||||||
அவைத்தலைவர் | |||||||||||||
முன்னையவர் | சுசில்குமார் சிண்டே | ||||||||||||
வாரணாசித் தொகுதியின் மக்களவை உறுப்பினர் | |||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||
பதவியில் 5 சூன் 2014 | |||||||||||||
முன்னையவர் | முரளி மனோகர் ஜோஷி | ||||||||||||
14-ஆவது குசராத்து முதலமைச்சர் | |||||||||||||
பதவியில் 7 அக்டோபர் 2001 – 22 மே 2014 | |||||||||||||
ஆளுநர் | |||||||||||||
முன்னையவர் | கேசுபாய் படேல் | ||||||||||||
பின்னவர் | ஆனந்திபென் படேல் | ||||||||||||
மணிநகர், குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |||||||||||||
பதவியில் 15 திசம்பர் 2002 – 16 மே 2014 | |||||||||||||
முன்னையவர் | கமலேசு பட்டேல் | ||||||||||||
பின்னவர் | சுரேசு பட்டேல் | ||||||||||||
பதவியில் 24 பெப்ரவரி 2002 – 19 சூலை 2002 | |||||||||||||
முன்னையவர் | வாஜுபாய் வாலா | ||||||||||||
பின்னவர் | வாஜுபாய் வாலா | ||||||||||||
தொகுதி | ராஜ்கோட் II | ||||||||||||
பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் | |||||||||||||
பதவியில் 5 சனவரி 1998[1] – 7 அக்டோபர் 2001 | |||||||||||||
முன்னையவர் | குஷபாவு தாக்கரே | ||||||||||||
பின்னவர் | சஞ்சய் யோசி | ||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||
பிறப்பு | நரேந்திரபாய் தாமோதர்தாசு மோதி 17 செப்டம்பர் 1950 வாட்நகர், இந்தியா (இன்றைய குசராத்து) | ||||||||||||
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி | ||||||||||||
துணைவர்(கள்) | யசோதாபென் மோதி [2](தி. 1968; முறிவு 1971) | ||||||||||||
வாழிடம்(s) | 7, லோக் கல்யாண் மார்க், புது தில்லி, தில்லி, இந்தியா | ||||||||||||
முன்னாள் கல்லூரி | |||||||||||||
கையெழுத்து | |||||||||||||
இணையத்தளம் | |||||||||||||
வடகிழக்கு குசராத்தில் உள்ள வாட்நகரில் பிறந்து வளர்ந்த மோதி, அங்கு இடைநிலைக் கல்வியை முடித்தார். எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அறிமுகமானார். 18 வயதில், யசோதாபென் என்பவரை மணந்தார், ஆனாலும் விரைவில் அவரைக் கைவிட்டார். மோதி 1971 இல் குசராத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியரானார். அவ்வமைப்பு அவரை 1985 இல் பாசகவில் இணைத்தது. 2001 வரை கட்சியின் படிநிலையில் பல பதவிகளை வகித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார்.[3][4][5]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நேரடி கண்காணிப்பில் உள்ள அமைச்சகங்கள் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம் ஆகும். துறைகள் அணு சக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகும்.
எட்டு வயதில், மோடி இராட்டிரிய சுவயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எசுஎசு) அறிமுகமானார் மற்றும் அதன் உள்ளூர் சகாக்களில் (பயிற்சி அமர்வுகளில்) கலந்து கொள்ளத் தொடங்கினார். அங்கு, வக்கீல் சாகேப்பு என்று பிரபலமாக அறியப்பட்ட இலட்சுமண்ராவ் இனாம்தாரை மோடி சந்தித்தார், அவர் அவரை ஆர்எசுஎசில் பால்சுவயம்சேவக் (சூனியர் கேடட்) ஆக சேர்த்து, அவரது அரசியல் வழிகாட்டியாக ஆனார்..[6] மோடி RSS உடன் பயிற்சியில் இருந்தபோது, 1980 இல் BJP யின் குசராத்து பிரிவின் சுதாபக உறுப்பினர்களான பாரதிய சனசங்கத் தலைவர்களான வசந்த் கசேந்திரகட்கர் மற்றும் நதலால் சக்தா ஆகியோரையும் சந்தித்தார்.
1978 ஆம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் (SOL) அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[7] ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1983 இல், அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[8]
நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதீ மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014 ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார்.[9]
அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றி பெற்று அக்டோபர் 7, 2001 இல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 இல் தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
ஊடகங்கள் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர்.[10] இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.[11][12][13] இந்தியாவிற்குள்ளும், பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதீ உள்ளார்.[14][15][16][17]
கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002 ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாட்டப்பட்டது இருப்பினும் நீதிமன்றத் தீர்ப்பு இவருக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.[17][18]
பெண் ஒருவரை சட்டத்திற்குப் புறம்பாக வேவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.[19]
குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.[20] இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.[21]
2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.[22]
பாஜகவின் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார்.[23]
2019 ஆம் ஆண்டு 17 ஆவது மக்களவைத்தேர்தலில் வாரணாசியில் 674664 வாக்குகள் பெற்று 479505 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியடைந்தார். இரண்டாவதாக வந்த சமாஜ்வாதி கட்சியின் சாலினி யாதவ் 195159 வாக்குளும் மூன்றாவதாக வந்த காங்கிரசின் அசய் ராய் 152548 வாக்குகளும் பெற்றனர்.
2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் வாரணாசியில் போட்டியிட்டு 152513 வாக்குகள்ல வேறுபாட்டில் காங்கிரசின் அசய் ராயை வென்றார்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்கு | வாக்கு % |
---|---|---|---|
நரேந்திர மோதி | பாசக | 612970 | 54.24 |
அசய் ராய் | காங்கிரசு | 460457 | 40.74 |
அத்தர் சமால் லரி | பகுசன் சமாச் கட்சி | 33766 | 2.999 |
மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோதீ மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.[24]
2019 இந்தியப் பொதுத் தேர்தலில், 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நரேந்திர மோதி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராக 30 மே 2019 அன்று பதவி ஏற்றார்.[25][26][27][28]
7 அக்டோபர் 2001 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குசராத் மாநில் முதலமைச்சராக பொது வாழ்க்கையில் பணி துவங்கிய நரேந்திர மோதி, 7 அக்டோபர் 2020 முதல் இருபதாம் ஆண்டில் நுழைந்துள்ளார். இருபதாண்டுகளில் நரேந்திர மோதி, குஜராத் மாநில முதலமைச்சராக 4 முறையும், இந்தியப் பிரதமராக 2 முறையும் பதவி வகித்துள்ளார்.[31][32][33][34][35][36][37]
வெளிநாடுகளில் பிரதமர் நரேந்திர மோதி பெற்ற 11 உயரிய சிவிலியன் விருதுகள்:[39]
குசராத் முதலமைச்சராக மோதி தனது பதவிகாலத்தில் கிடைத்த அனைத்துப் பரிசுப்பொருட்களையும் வருடந்தோறும் ஏலம் விட்டு கன்யா கேலவாணி அபியான் என்ற பெயரினில் பெண் குழந்தைகள் திட்டத்திற்கு கொடுத்தார். 2003 முதல் 2014 வரை வருடந்தோறும் நடந்த இந்த ஏலம் மூலம் 89.96 கோடி பெறப்பட்டது.[52]. பிரதமராகவதற்கு முன்பு 2014 மேமாதத்தில், குசராத் அரசு ஊழியர்களாக வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களின் பெண் குழந்தைகள் படிப்பிற்கு தனது சொந்த சேமிப்பிலிருந்து 21இலட்சம் நன்கொடையாக அளித்தார்.[53]
பிரதமர் மோதி தனது முதல் பதவிகாலத்தில் தனக்கு கிடைத்த அனைத்துப் பரிசுப்பொருட்களையும் ஏலம் விடுவதின் மூலம் கிடைக்கும் பணத்தினை இந்தியாவின் ஜீவநதியான கங்கையைப் பாதுகாக்கும் "நமாமி கங்கா" திட்டத்திற்கு கொடுக்க முடிவு செய்தார். இவ்வாறு பரிசுப்பொருட்களை ஏலம் விடும் முதல் இந்தியப் பிரதமர் மோதி ஆவார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்ட 10இலட்சம் மதிப்பிலான அங்கியானது 4.3 கோடி மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டு, அந்தத் தொகையானது நமாமி கங்கா திட்டத்திற்கு கொடுக்கப்பட்டது.[54]
மோதி பிரதமரான பிறகு மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம், 3 அக்டோபர் 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தேசியத் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டு மக்களிடையே மாதம் ஒரு முறை உரையாற்றுகிறார்.மனதின் குரல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் "அன்றாட நிர்வாகத்தின் பிரச்சினைகள் குறித்து குடிமக்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதாகும்".[60][61]
மோதி பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை இராணுவ வீரர்களூடன் கொண்டாடிவருகின்றார்.[62][63][64]
வருடம் | இடம் | கூடுதல் தகவல்கள் |
---|---|---|
2014-அக்டோபர்-23 | சியாச்சின், லடாக் | |
2015-நவம்பர்-11 | அசல் உத்தர், பஞ்சாப் | அமிர்தசரசிலுள்ள, தோக்ராய் போர் நினைவுச்சின்னத்தில் 1965போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தல் |
2016-அக்டோபர்-20 | கின்னவுர், இமாச்சல்பிரதேசம் | சங்கோ கிராம மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். |
2017-அக்டோபர்-19 | குரேசு பள்ளத்தாக்கு, சம்மூ&காசுமீர் | பந்திப்போரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகில் |
2018-நவம்பர்-7 | கர்சில் கிராமம், உத்தரகாண்ட் | இராணுவம் மற்றும் இந்தோ-திபேத்திய எல்லைப்புற வீரர்களுடன் |
2019-அக்டோபர்-27 | ரஜோரி, சம்மு&காசுமீர் | |
2020-நவம்பர்-14 | லோங்வாலா, ராசுத்தான் | |
2021-நவம்பர்-04 | நௌசேரா, சம்மு&காசுமீர் | |
2022-அக்டோபர்-24 | கார்கில், லடாக் | |
2018 பிப்ரவரி 16 முதல், தேர்வு எழுதப்போகும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடும் "ப்ரிக்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சி மூலம் உரையாடுகின்றார்.
2023 ஜனவரி 27ல் ஆறாவது முறையாக, புதுதில்லி தல்கத்தோரா உள்ளரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்க்ள் மத்தியில் நடைபெறுகிறது. இதற்கான பதிவுசெய்யும் பணி நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெற்றது. 2022ல் 15.73 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், 2023ல் 38.8இலட்சம் பேர் உலகம் முழுவதிலிருந்தும் 155நாடுகளிலிருந்து இணையவழி நிகழ்ச்சிக்கு பதிவுசெய்துள்ளனர், 16இலட்சத்துக்கும் மேற்பட்ட மாநில தேர்வுவாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.[65]
பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ. 26.13 இலட்சம் அதிகரித்து, 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 2 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.[66][67]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.