மகர் மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகர் மக்கள் (Magar) நேபாளத்தின் மூன்றாவது பெரிய இனக்குழுவினர் ஆவர். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள மக்கள்தொகையில் மகர் மக்கள் 7% ஆகவுள்ளனர். மேற்கு நேபாளத்தில் பாயும் கண்டகி ஆற்றின் மேற்கு கரைப்பகுதியில் அமைந்த லும்பினி மாநிலத்தில் உள்ள குல்மி மாவட்டம், அர்காகாஞ்சி மாவட்டம் மற்றும் பால்பா மாவட்டங்களே மகர் மக்களின் தாயகம் ஆகும்.[1] மகர் மக்கள் மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம் மற்றும் ஆவியுலகக் கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். இம்மக்களின் பெரும்பாலோர் மகர் மொழியும், கைகே மொழியும் பேசுகின்றனர்.



Remove ads
நேபாளத்தில் மகர் மக்கள்தொகை பரம்பல்
2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் வாழும் மகர் மக்கள்தொகை 1,887,733 (7.1%) ஆகும். மகர் மக்கள் லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் உள்ள கீழ்கண்ட மாவட்டங்களில் வாழ்கின்றனர்:[2]
- பால்பா மாவட்டம் (52.3%)
- ரோல்பா மாவட்டம் (43.2%)
- மியாக்தி மாவட்டம் (39.5%)
- பியுட்டான் மாவட்டம் (32.6%)
- பாகலுங் மாவட்டம் (28.0%)
- தனஹு மாவட்டம் (26.9%)
- கிழக்கு ருக்கும் மாவட்டம் (23.8%)
- சியாங்ஜா மாவட்டம் (21.5%)
- குல்மி மாவட்டம் (20.7%)
- சுர்கேத் மாவட்டம் (18.9%)
- அர்காகாஞ்சி மாவட்டம் (18.0%)
- நவல்பராசி மாவட்டம் (17.5%)
- சல்யான் மாவட்டம் (15.1%)
- சிந்துலி மாவட்டம் (14.9%)
- உதயபூர் மாவட்டம் (13.9%)
- தாங் மாவட்டம் (13.6%)
- டோல்பா மாவட்டம் (12.5%)
- கோர்க்கா மாவட்டம் (11.6%)
- ஒகல்டுங்கா மாவட்டம் (11.2%)
- ராமேச்சாப் மாவட்டம் (11.1%)
- பர்பத் மாவட்டம் (11.0%)
- ரூபந்தேஹி மாவட்டம் (10.7%)
- தன்குட்டா மாவட்டம் (9.7%)
- தைலேக் மாவட்டம் (9.2%)
- ஜாஜர்கோட் மாவட்டம் (9.0%)
- காஸ்கி மாவட்டம் (8.6%)
- தாதிங் மாவட்டம் (8.5%)
- முஸ்தாங் மாவட்டம் (8.3%)
Remove ads
தொழில் & அரசியல்
மகர் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் இராணுவச் சேவை ஆகும்.நேபாளம், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவத்தில் மகர் இன கூர்க்கா மக்கள் போர் வீரர்களாகப் பணிபுரிகின்றனர்.[3][4]
கோத் படுகொலைகள் வரை நேபாள இராச்சியத்தின் முக்கிய அரசவைப் பிரபுக்களாக மகர் இனத் தலைவர்கள் இருந்தனர். மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சியிலும், பின்னரும் நேபாள இராச்சிய அரசவையில் ஆறு அமைச்சர்களில் ஒருவராக மகர் இனத் தலைவர் இருந்தார்.[5]நேபாள இராணா வம்ச ஆட்சியின் போது மகர் இன மக்கள் அரசவையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்.
- பாரம்பரிய உடை மற்றும் நகைகளில் மகர் இன இளைஞர்கள்
- நேபாள இராச்சியத்தின் தலைமை படைத்தலைவர் அபிமான் சிங் ராண மகர்
- மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் முதல் முதலமைச்சர் பிராஜ் தாபா மகர்
- லக்கன் தாபா மகர்
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads