தமிழர் நிலத்திணைகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு நிலத்திணை. தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணைகளைக் கொண்டது.[1] முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது [2] அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
Remove ads

ஐந்திணை

குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.

  • மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை; தெய்வம் முருகன்.
  • காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை; தெய்வம் திருமால்.
  • வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் திணை; தெய்வம் வேந்தன்.
  • கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் திணை; தெய்வம் வருணன்.
  • இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் (மணலும் மணல் சார்ந்த இடமும்) பாலைத் திணை; தெய்வம் கொற்றவை .

இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.

திணை என்பது ஒழுக்கம். அகத்திணை என்பது அகவொழுக்கம். புறத்திணை என்பது புறவொழுக்கம். தமிழில் உள்ள அகத்திணைப் பாடல்களுக்கு ஐந்திணைப் பாகுபாடு கொள்ளப்படுகிறது.

இந்தப் பாகுபாடு ஐந்து வகைப்பட்ட திணை-ஒழுக்கங்களை மையமாக வைத்துக் கொள்ளப்படுகிறது. புணர்தல், தலைவன் புறவொழுக்கத்தில் பிரியும்போது தன்னை ஆற்றிக்கொண்டு இருத்தல், தலைவன் தன்னை விட்டு அகவொழுக்கத்தில் பிரியும்போது ஊடுதல், கடலில் சென்றவருக்காக இரங்கல், புறப்பொருளுக்காகப் பிரிதல் என்பன அகத்திணைக்கு அகத்திணை உரிப்பொருள்கள். இவற்றில் திணை மயக்கம் நிகழ்வது இல்லை.[3] எனவே மயங்காத உரிப்பொருளின் அடிப்படையில் இன்ன பாடல் இன்ன திணை எனக் கொள்ளப்படும். எனவே குறிஞ்சித் திணை என்பது 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' பற்றிய செய்திகளைக் கூறுவது என்பது பொருள். பிற திணைகளுக்கும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும். இது தமிழ் நெறி. காண்க; அகத்திணை - புறத்திணை, திணை விளக்கம்

Remove ads

உரிப்பொருள்

மேலதிகத் தகவல்கள் திணை, உரிப்பொருள் ...
Remove ads

நானிலம்

மேலதிகத் தகவல்கள் திணை, நிலம் ...

தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர்.

ஐந்நிலம்

மேலே கண்ட நான்கு வகை நிலப் பாகுபாட்டுடன் பருவ மாற்றத்தால் தோன்றும் பாலை நிலத்தையும் சேர்த்து ஐந்நிலம் எனக் கொண்டனர். தமிழ்நாட்டில் பாலை நிலம் இல்லை.[4] பாலை நிலம் என்பது குறிஞ்சி-நிலத்திலும், முல்லை-நிலத்திலும் தோன்றும் பருவநிலை மாற்றம்.[5] ஐந்நிலம் என்பது ஐந்து வகைப்பட்ட நிலம். ஐந்திணை என்பது ஐந்து வகைப்பட்ட ஒழுக்கம்.

ஐந்திணை நிலவளம்

ஐந்து வகைப்படுத்தப்பட்ட நிலத்தின் வழித்தடப் பாங்கைப் பதிற்றுப்பத்து பாடல் [6] விளக்குகிறது. தொல்காப்பியம், நம்பியகப்பொருள் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் இந்த நிலப்பாகுபாடுகளை விரிவாக எடுத்துரைக்கின்றன.

  1. குறிஞ்சி - குறிஞ்சி திரிந்து பாலையாகிய நிலம் இப்பாடலில் காட்டப்பட்டுள்ளது.
  2. முல்லை - இந்த நிலத்து மக்கள் நிலத்தை உழுது வரகும், தினையும் விளைவிப்பர். வழிப்போக்கர்களுக்கு நுவணை என்னும் தினைமாவை விருந்தாகத் தருவர்.[7]
  3. மருதம் - மருத மரத்தைச் சாய்த்துக்கொண்டு வயலில் பாயும் வெள்ளத்தைத் தடுக்க வயலிலுள்ள கரும்பை வெட்டிக் குறுக்கே போட்டு அணைப்பர். இந்தத் தடுப்பு-விழா முரசு முழக்கத்துடன் நிகழும்.[8]
  4. நெய்தல் நிலத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வளம் நிறைந்த கானல் என்னும் மணல்-காடு. ஞாழல் மரங்களும், நெய்தல் கொடிகளும் இந்த நிலத்தின் தாவரங்கள். வெண்ணிறச் சிறகு கொண்ட குருகு இந்த நிலத்துப் பறவை.[9] மற்றொன்று மென்புலம். இங்கு அடும்பு கொடிகள் படர்ந்திருக்கும். சங்கு, முத்து, பவளம் ஆகியன விளையும்.[10]
  5. பாலை
  • இதில் குறிஞ்சி நிலம் திரிந்த பாலை ஒருவகை.
இங்கு வாழும் மக்கள் வேட்டுவர். இவர்கள் தம் தலையில் காந்தள் பூவைக் கண்ணியாகப் பிணைத்துத் தலையில் சூடிக் கொள்வர். வில்லம்பு கொண்டு ஆமான்களை உணவுக்காக வேட்டையாடுவர். யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து ஊர்க் கடைத் தெருவில் 'பிழி' என்னும் தேறலுக்காக விற்பர்.[11]
  • முல்லை நிலம் திரிந்த கடறு மற்றொரு வகை.
இது காடு விளையாமல் வறண்டு கிடக்கும் நிலம். இங்குள்ள மகளிர் ஆண்கள் காலில் அணியும் கழலை வீரத்தின் வெளிப்பாடாக அணிந்துகொண்டு திரிவர்.[12]

ஐந்திணை மனநிலை

  • தமிழ்நாட்டில் பாலை என்று கூறும்படி தனி நிலம் இல்லை. முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் கோடையின் வெப்பத்தால் திரிந்து பாலை என்னும் படிமை நிலையைக் கொண்டிருக்கும். அக்காலத்தில் ஒழுக்க நிலையிலும் திரிவு நிகழும். மழை பொழிந்த பின்னர் பாலை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். குடும்பத்தில் நிகழும் பிரிவும் அத்தகையதே.
  • இலக்கண நூல்கள் இந்த மனநிலையை 'உரிப்பொருள்' என்று கூறுகின்றன.
  • செய்யுளுக்கு உரிய சொல்லை 'உரிச்சொல்' என்றனர். அது போல செய்யுளுக்கு உரிய பொருளை 'உரிப்பொருள்' என்றனர். எண்ணிப்பார்த்தால் புணர்தல் என்பது மலைவாழ் மக்களுக்கு மட்டும் உரிய பொருள் அன்று என்பது விளங்கும். அதுபோலவே பிற உரிப்பொருள்களும் அமையும்.
  • எனவே உரிப்பொருளைச் செய்யுள் இலக்கணத்தின் மனநிலைப் பாகுபாடு என்று புரிந்துகொள்ள வேண்டும்.

ஐந்திணைப் பொழுதுகள்

  • பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். ஓர் ஆண்டின் ஆறு பருவகாலத்தைக் குறிப்பது 'பெரும்பொழுது'.
  • ஒரு நாளின் ஆறு பிரிநிலைக் குறியீடுகளைக் குறிப்பது 'சிறுபொழுது'
மேலதிகத் தகவல்கள் சிறுபொழுது, மணி (24 மணி கணக்கீடு)(60 நாழிகை என்பது ஒரு நாள்) (24 நிமிடம் என்பது ஒரு நாழிகை) ...
மேலதிகத் தகவல்கள் பெரும்பொழுது, கால எல்லையைக் குறிக்கும் வழக்கிலுள்ள தமிழ்மாதப் பெயர்கள் ...
  • தொல்காப்பிய அடிப்படையில் திணைகளுக்குத் தரப்பட்டுள்ள பொழுதுகள் வருமாறு;
மேலதிகத் தகவல்கள் திணை, பெரும்பொழுது ...
Remove ads

கருவிநூல்

  • பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், வே. சாமிநாதைய்யர் பதிப்பு, 1920
  • தொல்காப்பியம், தமிழ் இலக்கண நூல்கள், மூலம் முழுவதும் - குறிப்பு விளக்கங்களுடன், பதிப்பாசிரியர் முனைவர் ச.வே. சுப்பிரமணியன், 2007

அடிக்குறிப்பு

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads