திணைமாலை நூற்றைம்பது

பதிணென் கணக்கு நூல்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

Remove ads

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இஃது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...

இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன.

1குறிஞ்சி1தொடக்கம்31வரை31பாடல்கள்
2நெய்தல்32தொடக்கம்62வரை31பாடல்கள்
3பாலை63தொடக்கம்92வரை30பாடல்கள்
4முல்லை93தொடக்கம்123வரை31பாடல்கள்
5மருதம்124தொடக்கம்153வரை30பாடல்கள்
Remove ads

எடுத்துக்காட்டு

பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads