பதினெண் கீழ்க்கணக்கு
குறைந்த அடிகளுடைய 18 நூல்களின் தொகுப்பு. தமிழ் இலக்கியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு (Eighteen Lesser Texts) நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
Remove ads
நூல்வகைகள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." [1]
இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- முப்பால் (திருக்குறள்)
- திரிகடுகம்
- ஆசாரக் கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- கைந்நிலை
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும்.
வாய்ப்பாட்டுப் பாடலில் பாட வேறுபாடு
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்,
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு
இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும்.
இன்னிலை, கைந்நிலை, நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் சேரவேண்டும்
- இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் மேல் 45 வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். "இன்னிலை" நூலைத் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதிப்பித்தார்.
- "கைந்நிலை" என்ற நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன.
இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[2]
இன்னிலை, கைந்நிலை வேறுபாடு
Remove ads
பகுப்பு
இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொன்று நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.[3][4]
நீதி நூல்கள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஏலாதி
- பழமொழி நானூறு
- ஆசாரக்கோவை
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக்காஞ்சி
அகத்திணை நூல்கள்
புறத்திணை நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads