மாநிலங்களவைத் தேர்தல்கள் 2016
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2016 (2016 Rajya Sabha elections) என்பது மார்ச் 14 மற்றும் சூன் 11, 2016 ஆகிய தேதிகளில் இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக, இதன் 245 உறுப்பினர்களில் 70 (17 + 57) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 பேரையும், மீதமுள்ள 12 பேர் குடியரசுத்தலைவராலும் நியமிக்கப்படுகிறார்கள்.[1][2] 2016ஆம் ஆண்டு இரட்டை எண்ணிக்கையில் இருப்பதால், மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 ஆசனக் கூறுகளில் சுமார் 30% பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டாகும்.
பதவியில் இருப்பவர் விலகினாலோ, இறந்தாலோ அல்லது பதவியிலிருந்து தகுதி இழந்தாலோ இடைத்தேர்தல்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
Remove ads
மார்ச் தேர்தல்
6 மாநிலங்களிலிருந்து மாநிலங்கவைக்கு 6 ஆண்டுகளுக்கு 13 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 14, 2016 அன்று தேர்தல் நடைபெற்றது. கீழ்க்கண்ட மாநிலங்களில் உள்ள இடங்கள், அசாம் - 2 இடங்கள், இமாச்சலப் பிரதேசம் - 1 இடம், கேரளா - 3 இடங்கள், திரிபுரா - 1 இடம் என முடிவடையும் உறுப்பினர்களின் பதவிக்காலம் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து உறுப்பினரின் பதவிக்காலம் 2 ஏப்ரல் 2016 அன்று முடிவடைந்தது. ஆனால் இந்த இடம் 26 நவம்பர் 2015 முதல் காலியாக இருந்தது. பஞ்சாப் - 5 இடங்கள். இவர்கள் பதவிக்காலம் 9 ஏப்ரல் 2016 அன்று முடிவடைந்தது.[1]
அசாம்
இமாச்சல பிரதேசம்
கேரளா
நாகாலாந்து
திரிபுரா
பஞ்சாப்
Remove ads
சூன் தேர்தல்
15 மாநிலங்களிலிருந்து 57 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சூன் 11, 2016 அன்று தேர்தல் நடைபெற்றது.
ஆந்திரப் பிரதேசம்
பீகார்
சத்தீசுகர்
அரியானா
சார்கண்ட்டு
கர்நாடகா
மத்திய பிரதேசம்
மகாராஷ்டிரா
ஒடிசா
பஞ்சாப்
ராஜஸ்தான்
தமிழ்நாடு
தெலுங்கானா
உத்தரப்பிரதேசம்
உத்தரகாண்ட்
Remove ads
இடைத்தேர்தல்
குஜராத்
- குஜராத் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரவீன் ராஷ்டிரபால் இறந்ததால் ஏற்பட்ட காலியிடத்திற்கு 2016 சூன் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.[8] பர்சோத்தம்பாய் ரூபாலா சூன் 3 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2 ஏப்ரல் 2018 வரை இருந்தது.
மத்திய பிரதேசம்
- மத்தியப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நஜ்மா எப்துல்லா, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.[9] இதனால் நடைபெற்ற இடைத்தேர்தலில் இல. கணேசன் போட்டியின்றி அக்டோபர் 6, 2016 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 2, 2018 வரை உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads