From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (Provinces of India), பிரித்தானிய இந்தியாவில் முன்பு இதனை இராஜதானிகள் என்றும், இராஜதானி நகரங்கள் என்றும் அழைப்பர். இம்மாகாணங்கள் கிபி 1612 முதல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆகஸ்டு 1947 வரை இருந்தது. மேலும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட 565 சுதேச சமஸ்தானங்களும் இருந்தன. [1]
வரலாற்று கால வரிசைப்படி இம்மாகாணங்களின் ஆட்சியை மூன்றாகப் பிரிப்பர்.
கிபி 1608ல் முகலாயர்கள், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வணிகம் மற்றும் தொழில் செய்ய, அரபுக் கடற்கரையின் சூரத் பகுதியை வழங்கினர்.
பின்னர் 1611ல் ஆந்திரக் கடற்கரையின் மசூலிப்பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலைகள் கட்டினர்.[3] 1707ல் இந்தியாவில் முகலாயார் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர், மராத்தியப் பேரரசு எழுச்சி கொண்டது. 1761ல் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் பேரரசு, ஆங்கிலேயர்களிடம் வீழ்ச்சியுற்றது.
முன்னர் 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை, 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டை போர்களில் வங்காளம் மற்றும் அயோத்தி நவாபுகளை வென்று, வட இந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிப் பரப்புகளை விரிவுப்படுத்தினர்.
1760ல் நடைபெற்ற வந்தவாசிப் போரில் பிரஞ்சுப் படைகளை ஆங்கிலேயர்கள் சென்னைப் பகுதிகளிலிருந்து விரட்டியடித்தனர்.
1775 - 1818 முடிய பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற ஆங்கிலேய-மராட்டியப் போர்களின் முடிவில் மராத்தியப் பேரரசின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தை, பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ பகுதியாக மாற்றினர் [4] [5]
1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியாவில் கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பிரித்தானிய இந்தியாவின் அரசு ஆட்சி அமைக்கப்பட்டது.[5] அது முதல் இந்தியா, பிரித்தானியப் பேரரசின் காலனியாத்திக்க நாடாக மாறியது.
பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகத்திற்கும், நீதி முறைகளுக்கு தேவையான சட்டங்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பிரித்தானியாவில் நடைபெறும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற உயர் அதிகாரிகளைக் கொண்டு பிரித்தானிய இந்தியா அரசுகளின் துறைகள் மற்றும் மாவட்டங்கள் நிர்வகிக்கப்பட்டது.[6] and the Princely States,[7]
ஆங்கிலேயர்கள் நேரடியாக நிர்வகிக்க இயலாத, வளமற்ற, பாலவன, மலைகளும், காடுகளும் அடர்ந்த பகுதிகளை, தனக்கென சொந்தமாக இராணுவம் வைத்துக் கொள்ளாத இந்தியக் குறுநில மன்னர்கள் மூலம், கப்பம் வாங்கிக் கொண்டு மறைமுக ஆட்சி செலுத்தினர்.
1910 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த இந்திய மக்கள்தொகையில் 77% விழுக்காடும், மொத்த நிலப்பரப்பில் 54% விழுக்காடும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப்பகுதியில் இருந்தது. [8] மீதமுள்ள இந்திய நிலப்பரப்புகளை இந்திய மன்னர்களும் மற்றும் சிறு நிலப்பரப்புகளை போர்த்துகேய இந்தியா மற்றும் பிரஞ்சு இந்திய ஆட்சினரும் ஆண்டனர்.
ஆகஸ்டு, 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின், பிரித்தானிய இந்தியாவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது
1824 முதல் 1937 முடிய பிரித்தானிய இந்தியாவில் பர்மாவின் மூன்றில் இரண்டு பகுதிகள் கொண்டிருந்தது.[6] பின்னர் பர்மாவை தனி காலனி நாடாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று இலங்கை மற்றும் மாலத்தீவும், பிரித்தானியப் பேரரசின் தனி காலனி நாடுகளாக இருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய இந்தியாவின் மேற்கில் பாரசீகம், வடமேற்கில் ஆப்கானித்தான், வடக்கில் நேபாளம் மற்றும் திபெத்து, வடகிழக்கில் சீனா, கிழக்கில் தாய்லாந்து, தெற்கில் இந்தியப் பெருங்கடல் எல்லைகளாக கொண்டிருந்தது. இருந்தது. மேலும் ஏடன் மாகாணமும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இருந்தது.[9]
31 டிசம்பர் 1600 அன்று துவக்கபப்ட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், 1611ல் ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியான மசூலிப்பட்டினத்திலும், 1611ல் இந்தியாவின் மேற்கு கடற்கரை நகரமான சூரத்திலும் வணிக மையங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினர்.[10]1639ல் சென்னையில் சிறு வணிக மையத்தை நிறுவினர். [10][10] 1661ல் போர்த்துகல் நாடு இளவரசியை மணந்த பிரித்தானிய இளவரசருக்கு, சீர்வரிசையாக, மும்பை வழங்கப்பட்டது.[10]
முகலாயப் பேரரசர் ஷாஜகானின் அனுமதியுடன், 1640ல் வங்காளத்தின் கூக்ளி நகரத்தில் தொழிற்சாலைகள் நிறுவினர்.[10]
ஐம்பதாண்டுகள் கழித்து முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கிழக்கிந்தியக் கம்பெனியின் தொழிற்சாலைகளை கூக்ளியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.
ஜாப் சார்னோக் எனும் கம்பெனி நிர்வாகி கூக்ளி அருகே மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கி அப்பகுதியை கொல்கத்தா எனப்பெயரிட்டு, அப்பகுதியில், 1683ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதலாவது தலைமையகத்தை நிறுவினார்.[10]
ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்ட, சென்னை மாகாணம், மும்பை மாகாணம் மற்றும் வங்காள மாகாணம் என அழைக்கப்படும் இராஜதானிகளில், கிழக்கிந்திய கம்பெனியர், 18ம் நூற்றாண்டின் நடுவில், மூன்று கோட்டைகளுடன் கூடிய வணிக மையங்கள், தொழிற்சாலைகள் நிறுவினர். [11]
பிரித்தானிய அரசின் மையங்களாக மாகாணங்கள் நிறுவப்பட்டது. 1834ல் மாகாணங்களின் சட்ட விதிகளை வரையறுக்க, ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்திய அரசு, புதிய பகுதிகளை உடன்படிக்கை மூலம் அல்லது போர் மூலம் கைப்பற்றும் போது, அப்பகுதிகளை அருகில் உள்ள மூன்று இந்திய மாகாணங்களில் ஒன்றுடன் இணைக்கப்பட்டது.[16]
சட்டமன்றங்களால் வரையறுக்கப்படாத கஞ்சாம் மாவட்டம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்கள் பிரித்தானிய இந்திய அரசின் தலைமை ஆளுரின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டது. [17]
வரையறுக்கப்படாத, சட்டமன்றங்கள் இல்லாத மாகாணங்கள் தலைமை ஆளுநரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. [18] அவைகள்:
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் எட்டு மாகாணங்கள், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.:[19] 1905 - 1912 வங்காளப் பிரிவினையின் போது, கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பகுதி துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் இருந்தது. 1912ல் மீண்டும் ஒன்றிணைந்த வங்காள மாகாணம் நிறுவப்பட்டு, வடகிழக்கு மாநிலங்களைக் கொண்ட அசாம் மாகாணம், துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டது. பின்னர் துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தில் பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் புதிதாக நிறுவப்பட்டது.
மாகாணம்[19] | பரப்பளவு (ஆயிரம் சதுர மைல்களில்) | மக்கள்தொகை (மில்லியனில்) | தலைமை நிர்வாகி |
---|---|---|---|
பர்மா மாகாணம் | 170 | 9 | துணைநிலை ஆளுநர் |
வங்காள மாகாணம் | 151 | 75 | துணைநிலை ஆளுநர் |
சென்னை மாகாணம் | 142 | 38 | ஆளுநர் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழு |
மும்பை மாகாணம் | 123 | 19 | ஆளுநர் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழு |
ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் | 107 | 48 | துணைநிலை ஆளுநர் |
மத்திய மாகாணம் | 104 | 13 | தலைமை ஆணையாளர் |
பஞ்சாப் | 97 | 20 | துணைநிலை ஆளுநர் |
அசாம் மாகாணம் | 49 | 6 | தலைமை ஆணையாளர் |
சில சிறிய மாகாணங்கள் தலைமை ஆணையாளர் நிர்வாகத்தில் இருந்தது:[20]
குறு மாகாணம்[20] | பரப்பளவு (ஆயிரம் சதுர மைல்) | மக்கள்தொகை (மில்லியன்) | தலைமை நிர்வாக அதிகாரி |
---|---|---|---|
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் | 16 | 2,125 | தலைமை ஆணையாளர் |
பலுசிஸ்தான் மாகாணம் | 46 | 308 | தலைமை ஆணையாளர் |
குடகு மாகாணம் | 1.6 | 181 | மைசூர் இராச்சிய இருப்பிட அதிகாரி |
அஜ்மீர் - மெர்வாரா மாகாணம் | 2.7 | 477 | தலமை ஆணையாளர் |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 3 | 25 | தலைமை ஆளுநர் |
பிரித்தானிய இந்தியாவின் மேலாண்மையில் பெரிதும், சிறிதுமான 562 சுதேச சமஸ்தானங்கள், பிரித்தானிய அரசுக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டி தங்கள் பகுதிகளை ஆண்டனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.