சூர்யா (நடிகர்)
இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரவணன் சிவக்குமார் (Saravanan Sivakumar, பிறப்பு: 23 சூலை 1975) பொதுவாக அறியப்படுவது சூர்யா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வேல் (2007) , வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.[3]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.[4] இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006இல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.
திரைப்பட வாழ்க்கை
இவரின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றிப் பெற்றது.[5][6] 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை வசந்த் இயக்கிருந்தார். ஆனால் இதன் பிறகு வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்பெறவில்லை. குறிப்பாக காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1998) ,பெரியண்ணா (1999),[7] பூவெல்லாம் கேட்டுப்பார் (1999). இந்தத் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த ஜோதிகாவை இவர் மணந்துக் கொண்டார்.[5][8]
2001 ஆம் ஆண்டில் பாலாவின் (இயக்குநர்) இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார்.[9] இந்தப் படம் இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[10][11] 2003 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் நடித்தார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்த இரு திரைப்படங்களும் விமர்சன, வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் மூலம் தமிழகத் திரைப்படத்துறை முன்னணி நாயகர்களில் ஒருவரானார்.[5][12] மேலும் 51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததற்காக பரிந்துரை செய்யப்பட்டது.[13] பின் பேரழகன் திரைப்படத்தில் கல்லூரி மாணவராகவும், கூன் விழுந்த நபராகவும் இரு வேடங்களில் நடித்திருப்பார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 52 வது பிலிம்பேர் விருது பெற்றார்.[9][14] 2004 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து (திரைப்படம்) நடித்தார். இவர் இதில் மாணவ தலைவர் வேடத்தில் நடித்திருந்தார்.[9]
2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி, கஜினி, ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். கஜினியில் மறதிநோய் உள்ளவராக நடித்திருப்பார்.[11] இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (கஜினி (2008 திரைப்படம்) அதே பெயரில் வெளியானது. மாயாவி, ஆறு ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது.[15][16] 2006இல் சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்), 2007இல் வேல் (திரைப்படம்) போன்றவற்றில் நடித்தார். இதில் வேல் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[17][18] 2008 இல் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்தார். இதில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுப் பெற்றார்.[19][20]
2009இல் அயன் (திரைப்படம்), ஆதவன் (திரைப்படம்) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் சிங்கம் திரைப்படத்தில் நடித்தார். இதில் அனுசுக்கா செட்டி உடன் நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து சிங்கம் 2, சி3 (திரைப்படம்) ஆகியவை வெளியாகின.[21] ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்தார்.[22] ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தருமன் வேடத்தில் நடித்தார். இவரது மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே எனும் திரைப்படத்தை தயாரித்தார்.[23]
2012 ஆம் ஆண்டு இயக்குநர் கே. வி. ஆனந்த் இயக்கிய மாற்றான் என்ற திரைப்படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிங்கம் 2 என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்தார். இது 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்பட சிங்கம் தொடரின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த திரைப்படம் 5 சூலை 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
2014 ஆம் ஆண்டில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் என்ற திரைப்படம் 15 ஆகத்து 2014 அன்று வெளியாகி கலப்பு விமர்சனம் பெற்றது. அதே ஆண்டில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படமும் வெளியாகி கலப்பு விமர்சனம் பெற்றது.
Remove ads
பொதுச்சேவை மற்றும் தொண்டு
அகரம் என்ற ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில், இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.
திரைப்படங்களின் பட்டியல்
Remove ads
தொலைக்காட்சி
தயாரிப்பாளராக
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads