டிசம்பர் 2007
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிசம்பர் 2007 2007 ஆம் ஆண்டின் பன்னிரண்டாவது கடைசி மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16 இல் தொடங்கி 2008, ஜனவரி 14 இல் முடிவடைகிறது.
<< | டிசம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVII |
Remove ads
சிறப்பு நாட்கள்
- டிசம்பர் 11 - பாரதியார் பிறந்த நாள் (பி. 1882)
- டிசம்பர் 20 - வைகுண்ட ஏகாதசி
- டிசம்பர் 24 - ஆருத்ரா தரிசனம்
- டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்
நிகழ்வுகள்
செய்திகள் |
- டிசம்பர் 30 - பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக பெனசீர் பூட்டோவின் 19 வயது மகன் பிலாவால் பூட்டோ சர்தாரி தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
- டிசம்பர் 27 - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ ராவுல்பிண்டி நகரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். (ரொய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 25 - மேற்கு நேபாளத்தில் தொங்கு பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 15 பேஎர் கொல்லப்பாட்டு பலர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- டிசம்பர் 23 - நேபாளத்தில் 240 ஆண்டுகால மன்னராட்சியை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. (பிபிசி)
- டிசம்பர் 23 - இந்தியாவின் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல்களில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. (பிபிசி)
- டிசம்பர் 22 - ஐவரி கோஸ்ட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசாங்க ஆயுதக் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து ஆயுதங்களை கைவிடும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. (பிபிசி)
- டிசம்பர் 21 - பாகிஸ்தானில் பெஷாவார் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- டிசம்பர் 20 - 81 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்களை நிறைவு செய்து பிரித்தானியாவை ஆட்சிசெய்த மன்னர்கள், மகாராணிகளில் மிகவும் வயது முதிர்ந்தவரென்ற பெருமையை மகாராணி இரண்டாம் எலிசபெத் பெற்றார். (பிபிசி)
- டிசம்பர் 20 - நியூ சிலாந்து, கிஸ்போர்ன் நகரில் 6.8 நிலநடுக்கம் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பெரும் சேதம் ஏற்பட்டது. (சிட்னிமோர்னிங்ஹெரால்ட்)
- டிசம்பர் 19 - பாகிஸ்தானில் மெஹ்ராப்பூர் நகரில் கடுகதி தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். (பிபிசி)]
- டிசம்பர் 17 - பொலீவியாவின் நிர்வாகப் பகுதிகாளான பெனி, பாண்டோ, சாண்டா குரூஸ், தரிஜா ஆகியன நடுவண் அரசிலிருந்து சுயாட்சி மாகாணங்களாகத் தம்மை அறிவித்தன. (சிஎன்என்)
- டிசம்பர் 16 - இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் தாண்தேவாடா சிறையிலிருந்து கம்யூனிச நக்ஸலைட்டுகள் உட்பட குறைந்தது முந்நூறு கைதிகள் தப்பியோடினர். (பிபிசி)
- டிசம்பர் 15 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்கினார். (பிபிசி)
- டிசம்பர் 15 - பாலியில் இடம்பெற்ற ஐநா அவையின் காலநிலைமாற்ற மாநாட்டில் அடுத்த இரு ஆண்டு காலத்துள் காலநிலைமாற்றம் குறித்த புதிய உடன்படிக்கை ஒன்றை வரைய முடிவெடுக்கப்பட்டது. (நியூயோர்க் டைம்ஸ்)
- டிசம்பர் 13 - மலேசியாவில் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை செயற்குழுவின் தலைவர்கள் ஐந்து பேரை காவற்துறையினர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். (தமிழ்முரசு)
- டிசம்பர் 13 - அஸ்ஸாம் மாநிலத்தில் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். (அசோசியேட்டட் பிரஸ்)
- டிசம்பர் 12 - ஊக்க மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை மரியன் ஜோன்சின் 5 சிட்னி ஒலிம்பிக் விருதுகள் திரும்பப் பெறப்பட்டன். (ரொய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 5 - ஐக்கிய அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் ஒமாஹா நகரின் கடைத் தொகுதி ஒன்றில் குழுமியிருந்த மக்கள் மீது ஒருவன் சரமாரியாகச் சுட்டு எட்டுப் பேரைக் கொன்று தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான். (ராய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 3 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (படம்) தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார். (பிபிசி)
- டிசம்பர் 3 - ஆஸ்திரேலியாவின் 26வது பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த கெவின் ரட் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். (பிபிசி)
- டிசம்பர் 2 - ரஷ்ய அதிபார் விளாடிமிர் பூட்டினின் ஐக்கிய ரஷ்யக் கட்சி நாடாளுமன்றத் தேர்தல்களில் 62.8% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. (ராய்ட்டர்ஸ்)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- டிசம்பர் 29 - மன்னாரில் இலங்கைப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற சமரில் 20-க்கும் மேற்பட்ட படையினரும் 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர். (புதினம்)
- டிசம்பர் 27 - வவுனியா குருமண்காடுப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் காயமடைந்தனர். (புதினம்)
- டிசம்பர் 27 -டிசம்பர் 24 ஆம் நாள் இலங்கைப் படையினரால் கொழும்பில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சு தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் விடுவிப்பு.(புதினம்)
- டிசம்பர் 26 - யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் டோறாப் பீரங்கிப் படகு ஒன்றை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்தனர். இரண்டு டோறாக்கள் சேதமடைந்தன. (புதினம்)
- டிசம்பர் 26 - இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இந்தோனீசியாவுக்குச் சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை கடற்படையிரால் தடுத்து நிறுத்தப்பட்டது. (பதிவு)
- டிசம்பர் 24 - இலங்கைப் படையினரால் கொழும்பில் பிரெஞ்சு தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். (பதிவு)
- டிசம்பர் 23 - அமெரிக்காவின் செனட்சபை இலங்கைக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொண்டதை அடுத்து இரசியா இலங்கை அரசுக்கு படைத்துறை உதவிகளை வழங்க பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. (தமிழின் வெற்றி)
- டிசம்பர் 22 - மன்னார், உயிலங்குளத்தில் இரு முனைகளில் முன்னேற முயன்ற இராணுவத்தினரை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இடம்பெற்ற சமரில் 17 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 19 - தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளராக கே. இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். (புதினம்)
- டிசம்பர் 18 - வவுனியா, வீரபுரம் என்ர இடத்தில் இலங்கை இராணுவ காவலரண் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 18 - அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். (புதினம்)
- டிசம்பர் 11 - மன்னாரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதலில் 20 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர். (புதினம்)
- டிசம்பர் 5 - அநுராதபுரத்தில் கெப்பிட்டிகொல்லாவ என்ற இடத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு 23 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 5 - வவுனியா தந்திரிமலை சின்னசிப்பிக்குளத்தில் அமுக்க வெடியில் சிக்கி 4 படையினர் கொல்லப்பட்டு 2 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- டிசம்பர் 2 - கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 3,000 இற்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டனர். (புதினம்)
செய்திகள் காப்பகம்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads