தமிழ்நாடு அமைச்சரவை

முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார். அதன்படி குழுவின் தலைவருக்கு முதலமைச்சர் பதவி ஏற்பும் இரகசியம் (கமுக்கம்) காப்பு உறுதிமொழி ஏற்பும், அத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் துறைகள் வாரியாக அமைச்சர்களாகவும், ஆளுநரால் பதவி ஏற்பும் செய்யப் பெற்றதற்குப் பின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் இணைந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு புதிதாக ஒரு குழுவை அமைக்கின்றனர். இந்தக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர் முதலமைச்சராகவும், அவரது பரிந்துரைப்படி பிற துறைகளுக்கான அமைச்சர்களும் பொறுப்பேற்கிறார்கள்.

Remove ads

தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவை

மேலதிகத் தகவல்கள் வ. எண்., பெயர் ...

அமைச்சரவை மாற்றங்கள்

அமைச்சரவையில் புதியவரைச் சேர்த்தலும், 11 அமைச்சர்களின் துறை மாற்றங்களும்

14 டிசம்பர் 2022 அன்று உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சராக பதவியேற்றார்.[2]அன்றே 11 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டது.[3]

1. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு.

2. அமைச்சர் இ.பெரியசாமி - கூட்டுறவுத்துறையில் இருந்து ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. அமைச்சர் சு.முத்துசாமி - கூடுதலாக நகர்ப்பகுதி வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

4. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து கூட்டுறவுத்துறைக்கு மாற்றம்.

5. அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - கூடுதலாகக் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஒதுக்கீடு.

6. அமைச்சர் கா.இராமச்சந்திரன் - வனத்துறையில் இருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றம்.

7. அமைச்சர் ஆர்.காந்தி - கூடுதலாக பூதானம் மற்றும் கிராம தானம் துறை ஒதுக்கீடு.

8. அமைச்சர் பி.கே. சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையுடன் சேர்த்து கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு.

9. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை, திட்டம், மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள் துறையுடன் கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கீடு.

10. அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கீடு.

11. அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன் - சுற்றுலாத் துறையிலிருந்து வனத்துறைக்கு மாற்றம்.

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பும், அமைச்சரவையில் மாற்றங்களும்

29 செப்டம்பர் 2024 அன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.[4] கோவி. செழியன் , பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சா்களாக பதவியேற்றனர். அன்றே 5 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

செந்தில்பாலாஜி

வே. செந்தில்பாலாஜியை ஒரு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் 14 சூன் 2023 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வசமிருந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றபட்டு அவர் துறை இலாத அமைச்சராக இருந்தார். இருப்பினும் பலநாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க நேரிட்டதால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் 26 செப்டம்பர் 2024 அன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.[5] 29 செப்டம்பர் 2024 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை மாற்றத்தில் மீண்டும் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[6]

க. பொன்முடி

வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் க. பொன்முடிக்கு 21 திசம்பர் 2023 அன்று பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்ததைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை இழந்தார். அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் 22 மார்ச்சு 2022 இல் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சரானார். 29.09.2024 அன்று நடைபெற்ற தமிழ்க அமைச்சரவை மாற்றத்தில் இவருக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.[7] [8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads